வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின்ஹ் உடன் குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர் பேச்சுவார்த்தை

கம்போடியா சென்றுள்ள குடியரசுத் துணைத்தலைவர் ஜகதீப் தன்கர், வியட்நாம் பிரதமர் ஃபாம் மின் சின்ஹ் உடன் இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தினார்.

புனோம் பென் நகரில் நடைபெறும் ஆசியான்-இந்தியா மற்றும் 17-வது கிழக்கு ஆசிய உச்சி மாநாட்டிற்கிடையே இந்த பேச்சுவார்த்தை நடைபெற்றது.

இருதரப்பு பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கரும் உடனிருந்தார். பின்னர் உக்ரைன் வெளியுறவு அமைச்சர் டிமிட்ரோ குலேபாவுடன், ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த பேச்சுவார்த்தையில், அணு ஆயுத கவலைகள் உள்ளிட்டவைகள் குறித்து விவாதிக்கப்பட்டதாக ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.