அமெரிக்கா டெக்சாஸில் போர் விமானம் விபத்து: 6 பேர் பலி?| Dinamalar

டெக்சாஸ்: அமெரிக்காவில் 2-ம் உலக போர் விமானங்களின் சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில் டல்லாஸ் நகரில் விமான படை சார்பில் 2-ம் உலக போர் காலத்தின் விமானங்கள் அடங்கிய சாகச நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. இதில் பங்கேற்ற, பெரிய ரக போயிங் பி-17 குண்டுகள் வீசும் விமானம் மற்றும் ஒரு சிறிய ரக பெல் பி-63 கிங்கோப்ரா என்ற விமானமும் விண்ணில் பறந்து சென்றன.

இந்த இரு விமானங்களும் குறிப்பிட்ட அடி உயரத்தில் பறந்து சென்றபோது, சில மணி நேரத்தில் இரு விமானங்களும் மோதின. இதனால் நேராக முன்னோக்கி சென்ற போயிங் விமானத்தின் மீது அதன் இடதுபுறத்தில் சென்று சிறிய விமானம் மோதி உள்ளது.

latest tamil news

இந்நிலையில், இரண்டு விமானங்களும் விபத்தில் துண்டுகளாக உடைந்து, தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனால், இந்த 2-ம் உலக போர் விமானங்களின் வான்சாகச நிகழ்ச்சியில் ஏற்பட்ட விபத்தில் சிக்கி 6 பேர் உயிரிழந்திருக்க கூடும் என அஞ்சப்படுகிறது.

‛‛ விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை ”

இது குறித்து அமெரிக்காவின் டல்லாஸ் மேயர் எரிக் ஜான்சன் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: விமான விபத்து வீடியோக்கள் மனது நொறுங்கும் வகையில் உள்ளன. நமது குடும்பத்தினரை மகிழ்விப்பதற்காகவும், அதுபற்றிய கல்வியறிவை புகட்டுவதற்காகவும் விண்ணுக்கு பறந்து சென்றவர்களின் ஆன்மாவுக்காக வேண்டி கொள்ளுங்கள்.

latest tamil news

இரண்டு விமானங்களும் விபத்தில் துண்டுகளாக உடைந்து சிதறின. தொடர்ந்து தரையில் விழுந்து தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்வையாளர்களாக இருந்தவர்கள் வீடியோவாக எடுத்து உள்ளனர். பலர் அதிர்ச்சியில் உறைந்தனர். எனினும், விமானத்தில் இருந்த விமானிகளின் நிலை என்னவென தெரியவில்லை. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.