கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்த பேருந்து… பயணிகளின் கதி என்ன?

எகிப்து தலைநகர் கெய்ரோவில் இருந்து டகாலியா மாகாணம் நோக்கி தனியார் பேருந்து சென்றுக் கொண்டிருந்தது. வாகனத்தில் சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகள் பயணி்த்துக் கொண்டிருந்தனர்.

கெய்ரோவில் இருந்து 100 கிலோமீட்டர் தொலைவில் டகாலியா மாகாணத்தை நெருங்கி கொண்டிருந்தபோது பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நைல் நதி ஓடிக் கொண்டிருக்கும் டெல்டா பகுதியின் கால்வாயில் தலைகீழாக கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் குழந்தைகள், பெண்கள் உட்பட மொத்தம் 21 பேர் பலியாகியதாக எகிப்து நாட்டின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது. படுகாயமடைந்த 25 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு மருத்துவமனை தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடுவானில் பயங்கரம்… நேருக்கு நேர் மோதி நொறுங்கிய போர் விமானங்கள்… அமெரிக்காவில் பகீர்!

ஓட்டுநர் அதிவேகமாக பேருந்தை ஓட்டியதால் இந்த விபத்த ஏற்பட்டுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதாக டகாலியா மாகாண போலீசார் தெரிவித்துள்ளனர்.

கடந்த ஜூலை மாதம், மின்யா பகுதியில் நெடுஞ்சாலையில் நிறுத்தப்பட்டிருந்த டிரக் மீது பயணிகள் பேருந்து மோதிய விபத்தில் 23 பேர் பலியாகினர்; 30 பேர் படுகாயமடைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.