கொட்டும் மழையில் பிரசவ வலி – பழங்குடிப் பெண்ணுக்கு 108 ஆம்புலன்ஸில் பிறந்த அழகிய பெண் குழந்தை!

தமிழ்நாடு முழுவதும் கடந்த சில நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. அதன்படி கோவை மாவட்டத்திலும் கடந்த மூன்று நாள்களாக மழை பெய்து வருகிறது. கோவை மாவட்டம், காரமடை அருகே உள்ள சீலியூர் நீலாம்பதி என்கிற பழங்குடி  கிராமத்தைச் சேர்ந்தவர் மருதன் (30).

மழை

கூலித்தொழிலாளியான இவருடைய மனைவி சித்ரா (23). இவர்களுக்கு ஏற்கெனவே ஐந்து வயதில் ஓர் ஆண் குழந்தை இருக்கிறது.

இந்த நிலையில், சித்ரா இரண்டாவதாக கர்ப்பமடைந்தார். இதையடுத்து, நேற்று இரவு அவருக்கு திடீரென பிரசவம் வலி ஏற்பட்டது.  உடனடியாக 108 ஆம்புலன்ஸ்க்கு போன் செய்தனர். அதன் பேரில் மருத்துவ உதவியாளர் பாலமுருகன் ஓட்டுநர் அமுதன் ஆகியோர் சித்ராவின் வீட்டுக்கு விரைந்தனர்.

108 ஆம்புலன்ஸ்

பலத்த மழையையும் பொருட்படுத்தாமல், இரவு 11:30 மணி அளவில் சித்ராவை ஆம்புலன்ஸில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு விரைந்தனர்.

ஆனால், பிரசவ வலி அதிகமானதால் சித்ராவுக்கு  ஆம்புலன்ஸிலேயே அழகிய பெண் குழந்தை பிறந்தது. அதைத் தொடர்ந்து தாய்-சேய்  இருவரும் முதல் உதவி சிகிச்சைக்காக சீலியூர் ஆரம்பச் சுகாதார நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

108 ஆம்புலன்ஸில் பிறந்த குழந்தை

பிறகு அங்கிருந்து, அவர்கள் மேட்டுப்பாளையம் அரசு மருத்துவமனை அனுமதிக்கப்பட்டனர்.  தற்போது தாய், சேய் இருவரும் நலமாக உள்ளனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.