35 நாள் கால்ஷீட்டுக்கு 10 கோடி சம்பளமா? யாரப்பா அந்த பிரபல நடிகை!

தென்னிந்திய சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக இருப்பவர் நயன்தாரா. இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்ட அவர், தற்போதும் தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கிறார். கைவசம் ஜவான், இறைவன் உள்ளிட்ட படங்களை வைத்துக் கொண்டிருக்கும் அவர், புதிய படங்களிலும் கமிட்டாகி வருகிறார். அடுத்தாக வெறும் 35 நாட்களில் மட்டுமே நடிக்கும் ஒரு புதிய படத்துக்கு கால்ஷீட் கொடுத்திருக்கிறார்.

அந்த படத்தை டிரினிடென்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கிறதாம். அந்த படத்துக்கு தான் அவ்வளவு சம்பளம் பேசியிருக்கிறாராம் நயன்தாரா. இதன் மூலம் தென்னிந்தியாவில் மட்டுமல்லாமல் இந்திய அளவில் 10 கோடி சம்பளம் வாங்கும் நடிகைகளின் பட்டியலில் இணைந்திருக்கிறார். இந்த பட்டியலில் தென்னிந்தியாவில் இருந்து இடம்பெற்றிருக்கும் ஒரே நடிகையும் நயன்தாரா தானாம். திருமணமானாலும் அவருக்கான மவுசு குறையாமல் இருப்பதால் அவரும் வரும் வரை லாபம் என்பதுபோல் புதிய படங்களில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

திருமணத்துக்குப் பிறகு ஹீரோக்களுடன் நடிக்கும் படங்களைக் காட்டிலும், நாயகியை லீட் ரோலில் வைத்திருக்கும் படங்களில் நடிப்பது என்பதில் கவனமாக இருக்கிறாராம். திருமணத்துக்கு முன்பே இந்த முடிவை அவர் எடுத்து நடித்துக் கொண்டிருந்தாலும், இப்போது இந்த முடிவில் இன்னும் கறாராக இருக்க முடிவு செய்துவிட்டாராம். திரிஷா உள்ளிட்டோர் நயன்தாராவுக்கு இணையாக சினிமா துறையில் இருந்தாலும், அவரைவிட மிக குறைவாகவே சம்பளம் வாங்கிக் கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.