இருசக்கர வாகன திருடர்களை துரத்திப்பிடிக்க முயன்ற தனியார் நிறுவன மேலாளர்-சிசிடிவி காட்சி

நாமக்கல் மாவட்டம், குமாரபாளையத்தில் இருசக்கர வாகனத்தை திருட முயன்ற இளைஞர்களை தனியார் நிறுவன மேலாளர் துரத்தி பிடிக்க முயற்சித்த காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

அம்மன்நகர் பகுதியை சேர்ந்த நவீன்குமார், அவரது வீட்டு வாசலில் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். நேற்று நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த இரண்டு இளைஞர்கள் நவீன்குமாரின் வாகனத்தை திருட முயற்சி செய்துள்ளனர்.

இந்தக் காட்சியை அங்குள்ள தனியார் சாய தொழிற்சாலையின் மேலாளர் சிசிடிவி கேமராவில் பார்த்துள்ளார். உடனே வெளியே வந்த அவர் திருட்டை தடுத்து இளைஞர்களை பிடிக்க முயற்சி செய்தபோது, அவர்கள் தலைக்கவசத்தால் மேலாளரை தாக்கிவிட்டு அவர்கள் வந்த வாகனத்தை அங்கேயே போட்டுவிட்டு தப்பி சென்றுள்ளனர்.

இதுகுறித்த புகாரின் பேரில் அந்த வாகனத்தை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை செய்து வரும் நிலையில், இதுகுறித்த சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.