இரும்பு திருடியவர்களை கம்பத்தில் கட்டிவைத்து கொடூர தாக்குதல்!!

கூடாரம் அமைக்க வைத்திருந்த இரும்பு துண்டுகளை கிலோ கணக்கில் திருடிய 2 பேரை கும்பல் ஒன்று கம்பத்தில் கட்டிவைத்து கொடூரமாக தாக்கியது.

பீகார் மாநிலம் முசாபர்பூர் நகரில் பாலம் ஒன்றின் அருகே பல இரும்பு கூடாரங்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதற்காக பெரிய இரும்பு துண்டுகள் கொண்டு வரப்பட்டு வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஒரு வாரத்தில் 100 கிலோ வரையிலான இரும்பு துண்டுகள் அங்கிருந்து திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவத்தில் ஈடுபட்ட 2 பேரை கும்பல் ஒன்று கவனித்து உள்ளது.

கும்பலை பார்த்த இருவரும் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளனர். அவர்களை விரட்டி பிடித்த கும்பல் கம்பம் ஒன்றில் கட்டி வைத்து சரமாரியாக தாக்கியுள்ளது. இதில், அவர்கள் மயக்கமடைந்தனர்.

தகவல் அறிந்து வந்த போலீசார் அவர்களை காவல் நிலையத்திற்கு அழைத்து சென்றனர். இரும்பு திருடியவர்கள் இரண்டு பேரும் முசாபர்பூர் நகரை சேர்ந்தவர்கள் என போலீசார் தெரிவித்து உள்ளனர். மேலும் தொடர்ந்து அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

newstm.in

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.