மதுரை அருகே, வேட்டைக்காக சென்றபோது மின்வேலியில் சிக்கிய வேட்டை நாய்களை காப்பாற்ற சென்ற இளைஞர், மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார்.
அலங்காநல்லூர் அருகே உள்ள ஏ.புதுப்பட்டியைச் சேர்ந்த மாணிக்கம், தனது 5 வேட்டை நாய்களுடன் கொண்டையம்பட்டி மலையடிவாரத்திற்கு வேட்டைக்கு சென்றார். அப்போது, தோட்டத்தில் போடப்பட்டிருந்த மின்வேலியில் 5 வேட்டை நாய்களும் சிக்கி துடித்ததைக் கண்டு, நாய்களை காப்பாற்றசென்றபோது, மாணிக்கமும் அதே மின்வேலியில் சிக்கினார்.
மாணிக்கத்தை காணாது தேடிச்சென்ற உறவினர்கள் மாணிக்கம் மற்றும் நாய்கள் இறந்து கிடப்பதை கண்டு, போலீசாருக்கு தகவல் அளித்தனர். அய்யனார் கவுண்டன்பட்டியைச் சேர்ந்த அசோக்குமாரை, போலீசார் கைது செய்துள்ளனர்.