அடுத்த ஆண்டுக்கான ஐ.பி.எல் தொடரில் இருந்து பேட் கம்மின்ஸ் விலகல்

புதுடெல்லி,

16-வது ஐ.பி.எல். 20 ஓவர் கிரிக்கெட் போட்டி அடுத்த ஆண்டு (2023) ஏப்ரலில் தொடங்கி 2½ மாதங்கள் நடக்க இருக்கிறது. இந்த போட்டிக்கான வீரர்களை அணிகள் தக்கவைத்து கொள்ள இன்று (15-ந் தேதி) கடைசி நாளாகும். அடுத்த சீசனுக்கான வீரர்கள் மினி ஏலம் கொச்சியில் அடுத்த மாதம் (டிசம்பர்) 23-ந் தேதி நடக்கிறது.

இந்த நிலையில் கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்து இருந்த ஆஸ்திரேலிய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பேட் கம்மின்ஸ் அடுத்த வருடம் நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகி உள்ளதாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில்,

அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இருந்து விலகும் கடினமான முடிவை எடுத்துள்ளேன். அடுத்த ஒரு வருடத்திற்கு சர்வதேச கிரிக்கெட் தொடர்கள் அணி வகுத்து இருப்பதால் இந்த முடிவை எடுத்துள்ளேன். ஆஷஸ் தொடர் மற்றும் உலகக்கோப்பை தொடர்ருக்கு முன் சிறிது ஓய்வு எடுக்க வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.

கொல்கத்தா அணியின் புரிதலுக்காக எனது நன்றிகள். அருமையான வீரர்கள் மற்றும் பணியாளர்கள் குழு நான் விரைவில் அங்கு திரும்புவேன் என நம்புகிறேன்.

இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.

கடந்த ஐபிஎல் போட்டியில் பேட் கம்மின்சை கொல்கத்த அணி 7.25 கோடிக்கு வாங்கியது குறிப்பிடத்தக்கது. ஆஸ்திரேலிய ஒருநாள் அணியின் கேப்டனாக ஆரோன் பின்ச் ஓய்வு பெற்றதை அடுத்து பேட் கம்மின்ஸ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டனாக பேட் கம்மின்ஸ்சும், டி20 அணியின் கேப்டனாக ஆரோன் பின்ச்சும் செயல்பட்டு வருகின்றனர்.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.