அடுத்த 15 ஆண்டில் இந்தியாவின் தேவை நகர்ப்புற வளர்ச்சிக்கு ரூ.68.23 லட்சம் கோடி: உலக வங்கி மதிப்பீடு

புதுடெல்லி: அடுத்த 15 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களின் உட்கட்டமைப்பை மேம்படுத்த ரூ.68.23 லட்சம் கோடி தேவைப்படும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது. நாட்டில் உள்ள பல முக்கிய நகரங்களில் முன்னணி நிறுவனங்களில் முதலீடுகள் மற்றும் மக்கள் தொகை பெருக்கம் போன்ற பல காரணங்களால் பரப்பளவு விரிவடைந்து வருகிறது. இதனால், மக்கள் தொகை மற்றும் தொழிற்சாலைகளுக்கு ஏற்ப உள்கட்டமைப்பை உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அடுத்த 15 ஆண்டுகளில் நகர்ப்புற மக்களின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.68.23 லட்சம் கோடி தேவைப்படும் என்று உலக வங்கி மதிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து உலக வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் நகர்ப்புற மக்கள் தொகைக்கு ஏற்ப அவர்கள் தேவைகள் மற்றும் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கு அடுத்த 15 ஆண்டுகளில் ரூ.68,21,640 கோடி தேவைப்படும். ஆண்டுக்கு சராசரியாக ரூ.4.46 லட்சம் கோடி தேவை. ஆனால், தற்போது செலவழிக்கும் தொகை ரூ.1.43 லட்சம் கோடியாக மட்டுமே உள்ளது. 2036 ஆம் ஆண்டில் 60 கோடி மக்கள் இந்தியாவில் நகர்ப்புற நகரங்களில் வசிப்பார்கள். இது, நாட்டின் மக்கள்தொகையை ஒப்படுகையில் 40% ஆகும். இது, நகர்ப்புற உள்கட்டமைப்புக்கு கூடுதல் அழுத்தத்தை ஏற்படுத்தும். குறிப்பாக தூய்மையான அதிக குடிநீர் தேவை, நம்பகமான மின்சாரம், திறமையான மற்றும் பாதுகாப்பான சாலை போக்குவரத்து போன்ற பல்வேறு உள்கட்டமைப்பில் தரமாக மக்களுக்கு வழங்க வேண்டிய கட்டாயம் ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.