இதுதான் அப்பா -மகள் சென்டிமென்ட்… லாலுவுக்காக சிறுநீரகத்தை தானம் தரும் ரோகிணி!

பீகார் மாநில முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் பல்வேறு உடல்நல பிரச்னைகளால் அவதியுற்று வருகிறார். அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய மருத்தவர்கள் அறிவுறுத்தி இருந்ததையடுத்து கடந்த மாதம் அவர் சிகிச்சைக்காக சிங்கப்பூர் சென்றிருந்தார்.

ஆனால் கால்நடை தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்று ஜாமீனில் வெளிவந்துள்ள அவர், இந்தியாவுக்கு வெளியே தங்குவதற்கு சிபிஐ நீதிமன்றம் விதித்திருந்த காலக்கெடு அக்டோபர் 24 ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதன் காரணமாக அவர் 23 ஆம் தேதியே டெல்லி திரும்பினார்.

அங்கு அவர் தற்போது தமது மூத்த மகள் மிசா பார்தியின் வீ்ட்டில் தங்கியுள்ள நிலையில், சிங்கப்பூரில் உள்ள லாலு இளைய மகள் ரோகிணி ஆச்சார்யா, தமது தந்தைக்கு சிறுநீரக தானம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மருத்துவ பரிசோதனையில் ரோகிணியின் சிறுநீரகம் லாலுவுக்கு ஒத்துப்போனதையடுத்து, மிகப்பெரிய முடிவை அவர் எடுத்துள்ளதாக தெரிகிறது.

இதுகுறித்து ரோகிணி ஆச்சார்யா வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ” என் அப்பாவுக்காக என்னால் எதையும் செய்ய முடியும். எல்லாம் நல்லபடியாக நடைபெற இறைவனை வேண்டிக்கொள்ளுங்கள். உங்கள் எல்லோருக்காகவும் குரல் கொடுக்க என் தந்தை மீண்டும் உடல்நிலை பெற்று வருவார்” என்று ரோகிணி உருக்கமாக தெரிவித்துள்ளார்.

அத்துடன் லாலு அவரை மடியில் வைத்திக்கும் சிறு வயது கருப்பு, வெள்ளை புகைப்படத்தை தமது ட்விட்டர் பதிவில் ரோகிணி வெளியிட்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.