செந்தில்பாலாஜி தொகுதியில் அதிர்ச்சி.. கழிவுநீர் தொட்டியில் இறங்கிய 3 தொழிலாளர்கள் பலி

கரூர் சுக்காளியூர் அருகே கழிவு நீர் தொட்டியில் விழுந்து மூவர் உயிர் இழப்பு.

கரூர் மாவட்டம் சுக்காலியூர் அருகே புதிய கட்டிட வேலை நடைபெற்று வந்த நிலையில் சாரம் அவுக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளி கழிவு நீர் தொட்டியில் விழுந்தார். அவரைக் காப்பாற்ற சென்ற இரண்டு கட்டிட தொழிலாளியும் கழிவுநீர் தொட்டியில் விழுந்து மூவரும் விஷ வாயு தாக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

தகவல் அறிந்த வந்த தீயணைப்பு வீரர்கள் மூவரின் உடல்களையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இந்நிலையில், சம்பவ இடத்தில் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.