சென்னை: மீன் தொட்டிக்குள் விழுந்த பொம்மை… எடுக்க முயன்ற குழந்தைக்கு ஏற்பட்ட பரிதாபம்!

அம்பத்தூரில் வீட்டில் விளையாடிக் கொண்டிருந்த ஒன்றரை வயது குழந்தை மீன் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை அம்பத்தூர் வெங்கடபுரம் பகுதியை சேர்ந்தவர்கள் யுவராஜ் – கௌசல்யா தம்பதியினர். இவர்களுக்கு ஒன்றரை வயதில் பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில், நேற்று யுவராஜ் பணிக்கு சென்ற பின்பு, கௌசல்யாவோ வீட்டு வேலைகளை செய்து கொண்டிருந்த நேரத்தில், குழந்தை வீட்டில் விளையாடிக் கொண்டிருந்துள்ளது. அப்போது வீட்டிற்குள் வைத்திருந்த மீன் தொட்டியில் குழந்தையின் விளையாட்டுப் பொருள் விழுந்துள்ளது.
image
இதையடுத்து விளையாட்டுப் பொருளை எடுக்க குழந்தை முயன்றபோது மீன் தொட்டிக்குள் தலைகீழாக கவிழ்ந்து குழந்தை உள்ளே விழுந்துவிட்டது. பத்து நிமிடம் கழித்து வேலைகளை முடித்துவிட்டு திரும்பிய கௌசல்யா, குழந்தை தலைகீழாக மீன் தொட்டியில் விழுந்திருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்திருக்கிறார்.
image
இந்நிலையில், குழந்தையை தூக்கிக் கொண்டு அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். அங்கிருந்த மருத்துவர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனைக்கு கொண்டு செல்ல அறிவுறுத்தியுள்ளனர். இதையடுத்து எழும்பூர் மருத்துவமனைக்கு குழந்தையை கொண்டு சென்றார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த அரசு மருத்துவர்கள் குழந்தை வரும் வழியிலேயேள இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து மருத்துவமனை கொடுத்த தகவலை அடுத்து அம்பத்தூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.