பிரியா மரணத்திற்கு நியாயம் வேண்டும் – இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் டிவிட் வைரல்!

சென்னை வியாசர்பாடி பகுதியைச் சேர்ந்த கால்பந்து ஆட்ட வீராங்கனை பிரியா. இவர் ராணி மேரி கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். 

கடந்த நவம்பர் 7ம் தேதி மூட்டு வலி பிரச்சனை காரணமாக கொளத்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பிரியாவுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. அப்போது அவரின் காயத்திற்கு போடப்பட்ட கட்டு இறுக்கமாக கட்டப்பட்டதால் ரத்த ஓட்டம் இல்லாமல் காலில் ரத்தக்கட்டு ஏற்பட்டதாக தெரிகிறது.

கடந்த 8ம் தேதி ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனைக்கு ஆபத்தான நிலையில் அழைத்துச் செல்லப்பட்ட பிரியாவுக்கு நவம்பர் 9ஆம் தேதி அறுவை சிகிச்சையின் மூலம் கால் அகற்றப்பட்டது. தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த பிரியா இன்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 

முதல்கட்ட தகவலின்படி முதல்வர் ஸ்டாலின் தொகுதியான கொளத்தூரில் உள்ள அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அளித்த அலட்சியமான (தவறான) சிகிச்சையால் மாணவி பிரியா உயிரிழந்தது தெரியவந்துள்ளது.

இந்நிலையில், மாணவியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்று இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வலியுறுத்தியுள்ளார். இதுகுறித்த அவரின் செய்திக்குறிப்பில், “என் Game என்னை விட்டு போகாது, Come back குடுப்பேன்” தங்கை ப்ரியாவின் கடைசி வார்த்தைகள். நம்பிக்கை வார்த்தை சொன்ன தங்கையின் திடீர் உயிரிழப்பால் இதயம் நொறுங்கிப்போனேன். 

இளம் வீரர்கள் இந்தியாவின் விலை மதிப்பற்ற சொத்துகள் அவர்களை காப்பது நம் அனைவரின் கடமை #JusticeForPriya “என்று தெரிவித்துள்ளார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.