ரேஷனில் புதிய திட்டம்… உதயநிதி ஸ்டாலின் தொகுதியில் முதலில் அமல்!

உணவுப் பொருட்கள் கடத்தல் உள்ளிட்ட ரேஷன் கடைகளில் நடைபெறும் முறைகேடுகளை தடுக்க, தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

இதில் முக்கிய அம்சமாக தற்போது ரேஷன் பொருட்கள் விநியோகத்துக்கு பயன்படுத்தப்படும் ஸ்மார்ட் கார்டு திட்டத்தைவிட சிறப்பான தொழில்நுட்பத்தை கொண்ட, கருவிழி அடையாளத்தை கொண்டு பொருட்கள் வழங்கும் திட்டம் விரைவில் செயல்படுத்தப்படும் என்று தமிழக அரசு அறிவித்திருந்தது.

அதன்படி இத்திட்டம் தற்போது, திமுக இளைஞரணி செயலாளரும், எம்எல்ஏவுமான உதயநிதி ஸ்டாலினின் சேப்பாக்கம் தொகுதியிலும், அரியலூரில் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

சோதனை முயற்சியாக செயல்படுத்தப்பட்டுள்ள இத்திட்டம், விரைவில் படிப்படியாக மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் அமல்படுத்தப்படும் என்று உணவுத் துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் இனி அமைக்கப்படும் ரேஷன் கடைகளில் கழிவறை வசதி கட்டாயம் ஆக்கப்படும் எனவும், அதனை நுகர்வோர் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார். திருவாரூரில் நடைபெற்ற கூட்டுறவு வார விழாவில் அமைச்சர் சக்கரபாணி இத்தகவல்களை தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.