bihar road accident: சாலையோரம் சாமி வழிபாடு… கூட்டத்தில் லாரி புகுந்த விபத்தில் 12 பேர் பலி

பிகார் மாநிலம், வைஷாலி மாவட்டத்துக்குட்பட்ட தேஸ்ரி காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நேற்றிரவு மத ஊர்வலம் நடைபெற்று கொண்டிருந்தது. அப்போது சாலையோர மரத்தடியில் நூற்றுக்கும் மேற்பட்ட ஒன்றாக கூடி வழிபாடு நடத்தி கொண்டிருந்தனர்.

அப்போது அந்த வழியே சாலையில் வேகமாக வந்த லாரி, டிரைவரின் கட்டுப்பாட்டை மீறி சாலையோரம் நின்று வழிபாடு செய்து கொண்டிருந்த பக்தர்களின் மீது வந்த வேகத்தில் மோதியது. இந்த கோர விபத்தில் பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 12 பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

‘சுல்தான்பூர் கிராமத்தைச் சேர்ந்த ஒருவரின் வீட்டில் சில தினங்களில் திருமணம் நடைபெற இருந்தது அந்த திருமண வைபவத்தின் முக்கிய நிகழ்வாக நேற்று வழிப்பாட்டு ஊர்வலம் நடைபெற்றது.

அப்போது மஹ்னார் -ஹாஜிபூர் நெடுஞ்சாலையில் வேகமாக வந்து கொண்டிருந்த லாரி டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து வழிப்பாட்டு கூட்டத்தில் நுழைந்தது. இந்த கோர விபத்தில் 4 குழந்தைகள் உட்பட்ட 12 பேர் பலியாகினர். இவர்களில் ஒன்பது பேர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.

காயமைடைந்தவர்கள் ஹாஜிபூரில் உள்ள அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர். அவர்களில் மூன்று பேர் மருத்துவமனைக்கு போகும் வழியிலேயே உயிரிழந்தனர். உடல்நிலை மோசமாக உள்ளவர்கள் பாட்னாவில் உள்ள மருத்துவமனைகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்” 3 பேர் மருத்துவமனைக்கு போகும் வழியிலும் உயிரிழந்தனர். கவலைக்கிடமாக உள்ளவர்கள் மேல்சிகிச்சைக்காக பாட்னா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்’ என்று வைசாலி மாவட்ட காவல் துறை தெரிவித்துள்ளது.

குடியரசுத் தலைவர் இரங்கல்:
இந்த விபத்து குறித்த செய்தி அறிந்து அதிர்ச்சி அடைந்ததாகவும், இத்துயர சம்பவம் தமக்கு மிகுந்த மனவேதனையை அளிக்கிறது என்றும் அவர் தமது இரங்கல் செய்தியில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நிவாரணம்:
பிகாரில் நிகழ்ந்த விபத்து குறித்து வருத்தம் தெரிவித்துள்ள பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கும், காயமடைந்தவர்களுக்கும் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து இழப்பீடு அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், ‘பிகார் மாநிலம், வைஷாலியில் நடைபெற்ற சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா 50 ஆயிரம் ரூபாயும் பிரதமரின் நிவாரண நிதியில் இருந்து அளிக்கப்படும்’ பிரதமர் மோடி தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.

விபத்து நிகழ்ந்த இடம் தலைநகர் பாட்னாவில் இருந்து 30 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது என்பதும், இந்த கோர விபத்து ஞாயிற்றுக்கிழமை இரவு (நவம்பர் 20) நிகழ்ந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.