துணிக்கடைக்கு வரும் பெண்களிடம் நட்பாக பழகி விபச்சாரத்தில் ஈடுபடுத்திய பெண் கைது!

விஜயவாடா,

அந்திராவின் விஜயவாடா மேற்கு பகுதியை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் உள்ளூரில், படமடா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட படமடா உயர்நிலைப் பள்ளி சாலையில் துணிக்கடை நடத்தி வருகிறார். இந்தக் கடையில் பெண்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டனர். அவர்களுக்கு விருந்து கொடுப்பதும், பரிசுகள் கொடுப்பதும் அடிக்கடி நடந்து உள்ளது.

இந்நிலையில், விருந்துக்கு வந்த பெண்களுக்கு குளிர்பானத்தில் போதைப்பொருள் கலந்து கொடுக்கப்பட்டது. அவர்கள் சுயநினைவின்றி இருக்கும்போது அவர்களை வீடியோ மற்றும் புகைப்படம் எடுப்பார்கள். அதன்பின் துணிக்கடை பெண்களை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது வழக்கம்.

வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களைக் காட்டி மிரட்டி அவர்களை விபச்சாரத்திற்கு அழைத்துச் சென்றனர். இது பல நாட்கள் நடந்தது. இறுதியில், ஒரு பெண் துணிச்சலாக போலீசை அணுகியதில் இந்த விஷயம் வெளிச்சத்துக்கு வந்தது.

விஜயவாடா போலீஸ் கமிஷனரிடம் இரண்டு இளம்பெண்கள் புகார் செய்தனர். இதை தீவிரமாக எடுத்துக்கொண்ட போலீசார், தீவிர விசாரணை நடத்தியதில் உண்மை விஷயம் தெரிய வந்தது. துணிக்கடை நடத்தி வந்தப் பெண்ணுக்கு எதிராக உள்ளூர் காவல் நிலையத்தில் பலமுறை புகார் அளித்தும் அலட்சியம் காட்டப்பட்டதாகக் கூறப்படுகிறது.

துணிக்கடை நடத்தி வந்தப் பெண் தன் கடையில் வேலை செய்யும் பெண்களையும், கடைக்கு வரும் இளம் பெண்களையும் தன் வார்த்தைகளால் கவர்ந்தாள். விவாகரத்து பெற்ற பெண்கள், கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்தும் மாணவிகள் மற்றும் ஏழை குடும்பங்களைச் சேர்ந்த பெண்களுடன் நட்பாகக் பழகி வந்துள்ளார்.

இதன் மூலம் பார்ட்டிக்கு வரும் பெண்களுக்கு குளிர்பானத்தில் போதை மருந்து கலந்து கொடுக்கப்படுகிறது. இவர்களது நிர்வாண புகைப்படங்களை தனது போனில் எடுப்பது வழக்கம். அதன்பிறகு பெண்களை அழைத்து விபச்சாரத்தில் ஈடுபடுத்தினார். ஆனால், அதை கேட்காதவர்களை இந்த போட்டோக்கள் மற்றும் வீடியோக்களை காட்டி மிரட்டியது போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.