சபரிமலை பெயரை பயன்படுத்தக் கூடாது.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு..!

சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என ஹெலி கேரளா எனும் தனியார் நிறுவனத்துக்கு கேரள ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.

கேரள மாநிலம் சபரிமலையில் அமைந்துள்ள புகழ்பெற்ற அய்யப்பன் கோவிலில், மண்டல மற்றும் மகர விளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.

இந்நிலையில், கொச்சியில் இருந்து சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவை வழங்குவதாக ஹெலி கேரளா என்ற நிறுவனம் சமூக வலைதளங்களில் விளம்பரம் செய்தது. அதன்படி, கொச்சியில் இருந்து சன்னிதானத்தில் விஐபி தரிசனம் செய்வது வரை அனைத்துக்கும் 45 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிப்பதாக அந்த நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்த விளம்பரத்தைக் கண்ட கேரள ஐகோர்ட், தாமாக முன்வந்து கடந்த சனிக்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இந்த நிலையில், இந்த வழக்கு நீதிபதிகள் அனில் கே.நரேந்திரன், அஜித்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, தேவசம் போர்டின் அனுமதியின்றி சபரிமலைக்கு ஹெலிகாப்டர் சேவையை விளம்பரம் செய்த தனியார் நிறுவனத்துக்கு ஐகோர்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.

மேலும், சபரிமலை என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது என்றும் தெளிவுபடுத்தியது. இதையடுத்து அந்த விளம்பரத்தை நிறுத்தி விட்டதாக நிறுவனத்தின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தெரிவித்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.