பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது

சென்னை:
பாலியல் தொல்லை புகாரில் தலைமறைவாக இருந்த பள்ளி தாளாளர் கைது செய்யப்பட்டார்.

ஆவடியை அடுத்த திருநின்றவூர் இ.பி. காலனியில் உள்ள தனியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்
பள்ளியின் தாளாளராக வினோத்.

இவர் பள்ளியில் படிக்கும் பிளஸ்-2 மாணவிகளுக்கு கவுன்சிலிங் மற்றும் சிறப்பு வகுப்பு தொடர்பாக பேசுவதாக அழைத்து பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது.

இதையடுத்து மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த பள்ளி தாளாளர் வினோத்தை உடனே கைது செய்ய வேண்டும் என்று கூறி பள்ளியில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் வினோத் தலைமறைவாக விட்டார்.

மாணவிகளின் பாலியல் புகார் தொடர்பாக பள்ளி தாளாளர் வினோத் மீது 4 பிரிவின் கீழ் திருநின்றவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தலைமறைவாக இருந்த வினோத்தை தேடி வந்தனர்.

இந்நிலையில், தலைமறைவாக இருந்த வினோத்தை கோவாவில் போலீஸார் கைது செய்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.