11 குற்றவாளிகள் விடுதலையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் பில்கிஸ் பானு மனு

புதுடில்லி, பில்கிஸ் பானு பலாத்கார வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 11 குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசின் உத்தரவை எதிர்த்து, அவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.குஜராத்தில், 2002ல் ஏற்பட்ட மதக் கலவரத்தின் போது, பில்கிஸ் பானு என்ற 21 வயது இளம் பெண் கூட்டு பாலியல் பலாத்காரத்துக்கு ஆளானர்.

9 பேர் படுகொலை

அவரது 3 வயது பெண் குழந்தை உட்பட அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒன்பது பேர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில், 11 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. சிறையில் தண்டனை அனுபவித்து வந்த அவர்களை, 1992 நன்னடத்தை விதிகளின்படி கடந்த ஆக., 15ல் குஜராத் அரசு விடுவித்தது. காலாவதியான விதியின் கீழ் அவர்கள் விடுவிக்கப்பட்டதாக எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து, இந்த விவகாரத்தில் மத்திய அரசின் ஒப்புதலை குஜராத் அரசு கோரியது.

இரண்டே நாட்களில் அந்த கோரிக்கையை பரிசீலித்த மத்திய அரசு, 11 பேரும் நன்னடத்தையின் கீழ் விடுவிக்கப்பட்டது செல்லும் என உறுதி செய்தது. இந்த உத்தரவை எதிர்த்து பில்கிஸ் பானு, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிகாரம் இல்லை

அதில், ‘இந்த வழக்கு விசாரணை மஹாராஷ்டிராவில் நடந்தது. எனவே, குற்றவாளிகளை நன்னடத்தையின் கீழ் விடுவிக்கும் அதிகாரம் குஜராத் அரசுக்கு இல்லை’ என, கூறப்பட்டுள்ளது.
குஜராத் சட்டசபை தேர்தலின் முதல்கட்ட ஓட்டுப்பதிவு இன்று நடக்கும் நிலையில், பில்கிஸ் பானு தாக்கல் செய்துள்ள மனு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.