ம.பி.,யில் புலி தாக்கியதில் பெண் ஒருவர் பரிதாப பலி| Dinamalar

பாலாகாட்,
மத்திய பிரதேசத்தில் வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவரை புலி தாக்கியதில் அவர் பலியானார்.

மத்திய பிரதேசத்தில் பாலாகாட் மாவட்டத்தில் உள்ள நந்த்கான் கிராமத்தைச் சேர்ந்த 25 வயது பெண் வயலில் வேலை செய்து கொண்டிருந்தார்.

இதன் அருகே உள்ள வனப்பகுதியிலிருந்து வந்த புலி திடீரென தாக்கியதில் அவர் உயிரிழந்தார்.

இதைப் பார்த்து கிராமத்தினர் கூச்சலிட்டதில், புலி காட்டுக்குள் தப்பி சென்றது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர், உயிரிழந்த பெண்ணில் உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின், கிராமத்தினரை வனப்பகுதி அருகே செல்ல வேண்டாம் என எச்சரித்தனர்.

இதுகுறித்து நந்த்கான் பஞ்சாயத்துத் தலைவர் விஜய் சகாரே கூறுகையில், ”கடந்த ஒரு மாதமாகவே இந்தப்புலி வனப்பகுதியை ஒட்டிய கிராமப் பகுதிகளில் சுற்றித் திரிகிறது”, என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.