இளவரசர் ஹரி & மேகனின் புதிய நெட்ஃபிக்ஸ் ஆவணத் தொடர் அடுத்த வாரம் வெளிவர இருக்கும் நிலையில், இந்த நிகழ்ச்சியால் மேகன் மார்க்லேவுக்கும் இளவரசி கேட் மிடில்டனுக்கும் இடையே நேரடியான மோதல் ஏற்படும் என்ற அச்சம் வெளிவர தொடங்கியுள்ளது.
நெட்ஃபிக்ஸ் ஆவணப்படம்
பிரித்தானிய அரச குடும்ப பொறுப்புகளில் இருந்து வெளியேறி அமெரிக்காவில் வாழ்ந்து வரும் சசெக்ஸின் டியூக் மற்றும் டச்சஸ் தம்பதியினரின் புதிய ஆவணப் படத்தின் டீசரை நெட்பிக்ஸ் நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டு இருந்தது.
சுமார் 1 நிமிடம் 12 வினாடிகள் கொண்ட டீசரில் இளவரசர் ஹரி “மூடிய கதவுகளுக்கு பின்னால் என்ன நடக்கிறது என்பதை யாரும் பார்க்கவில்லை” என்று விளக்கி இருந்தார்.
Harry & Meghan. A Netflix Global Event. Coming soon, only on Netflix. pic.twitter.com/ysxaCcESP4
— Netflix (@netflix) December 1, 2022
அத்துடன் ஒரு காட்சியில் இளவரசர் ஹரி தனது தலையை பின்னால் சாய்த்து கொண்டு உட்கார, இளவரசி மேகன் மார்க்கல் தனது கண்ணீரை இரு கைகளாலும் துடைப்பது போல் காட்டப்பட்டுள்ளது.
இளவரசர் ஹரி மற்றும் மேகனின் ஆறு பாகங்கள் கொண்ட இந்த ஆவணப்படத்தின் முதல் பாகம் வரும் வியாழன் கிழமை ஒளிப்பரப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Getty Images)
மோதல் ஏற்படும் அச்சம்
நெட்ஃபிக்ஸ் நிறுவனத்தால் வெளியிடப்பட்ட ஹரி மற்றும் மேகனின் ஆவணப்படத்தின் முன்னோட்ட காட்சிகளில் ஹரி, மேகன் தம்பதியினரை அரண்மனை மற்றும் வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி அவர்களை வித்தியாசமாக நடத்தியதை காட்டுகிறது.
மேலும் இந்த தொடரானது மேகன் மற்றும் கேட் எவ்வாறு நடத்தப்பட்டார்கள் மற்றும் ஊடகங்களால் அவர்கள் எவ்வாறு சித்தரிக்கப்பட்டார்கள் என்பதை ஒப்பிடும் என்று கூறப்படுகிறது.
ஏனென்றால் சசெக்ஸை ஆதரிக்கும் முயற்சியில் இரண்டு பெண்களும் ஆவணப்படத்தில் ‘அருகருகே வைக்கப்படுவார்கள்’ என்று insiders தெரிவித்துள்ளனர்.
PA
அத்துடன் ஹரி மற்றும் மேகனின் இந்த புதிய ஆவணப்படம் பார்வையாளர்களுக்கு “வெளியேறுவது மட்டுமே அவர்களின் விருப்பம்” என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் என்று கூறப்படுகிறது.
சர்ச்சைகளுடன் வெடிக்கும் இந்த புதிய நெட்ஃபிக்ஸ் ஆவணப்படத்தால் மேகன் மார்க்லேவுக்கும் இளவரசி கேட் மிடில்டனுக்கும் இடையே நேரடியான மோதல் ஏற்படும் அச்சம் இருப்பதாக அரச வட்டாரங்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றனர்.
Getty Images)
நெட்ஃபிக்ஸின் புதிய ஆவணப்படம் அடுத்த வாரம் வெளிவரும் போது அரண்மனை மிகவும் சோர்வாக இருக்கும் என்றும் ராயல் இன்சைடர்ஸ் தகவல் தெரிவித்துள்ளனர்.
சசெக்ஸின் கூட்டாளிகள் தயாரிப்பில் அரச குடும்பத்தை பற்றி பெரிய வெடிகுண்டுகள் எதுவும் இருக்காது என்று முன்பு வலியுறுத்தினர், மேலும் இது யாரையும் குறை சொல்லும் நோக்கம் இல்லை என்று குறிப்பிட்டுள்ளனர்.