ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கான போதைப்பொருள் பாதிப்பு தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு மட்டக்களப்பில் இன்று இடம்பெற்றது.
இதன் போது சமகாலத்தில் மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு சவாலாக அமைந்துவரும் போதைப்பொருள் பாவனை தொடர்பாவும், அதனால் மாணவர்களில் கல்வி வளர்ச்சியில் ஏற்படும் தாக்கம், மற்றும் இதனூடாக குடும்பங்களில் ஏற்படும் பின் விளைவுகள், சிறைச்சாலையில் சிறைக் கைதிகளுக்கு வழங்கப்படும் தண்டனைகள் தொடர்பாகவும் மாணவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது.
மட்டக்களப்பு பல்சமய ஒன்றியத்தின் தலைவரும் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்டத்திற்கான ஆலோசகருமான சிவஸ்ரீ.வீ.கே.சிவபாலன் குருக்களில் ஏற்பாட்டில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமை அமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட தலைவர் கணகசபாபதி ரஜனிகாந்த் தலைமையில் மட்டக்களப்பு இந்துக்கல்லூரியில் செயலமர்வு நடைபெற்றது..