ஏலியன் தாக்குதல் முதல் ஆய்வகக் குழந்தைகள் வரை: 2023க்கான பாபா வாங்காவின் பயங்கரமான கணிப்புகள்!


2022 ஆம் ஆண்டு முடிவுக்கு வரப்போகிறது, வரவிருக்கும் 2023-ஆம் ஆண்டிற்காக உலகம் உற்சாகமாக இருக்கிறது.

புதிய ஆற்றலுடனும் உற்சாகத்துடனும், மக்கள் 2023-ஐத் தழுவக் காத்திருக்கிறார்கள், ஆனால் அந்த ஆண்டிற்கான சில கணிப்புகள் மிகவும் பயமாக இருக்கிறது.

பொதுவாக பாபா வங்கா என்று அழைக்கப்படும் வங்கேலியா பாண்டேவா குஷ்டெரோவா, 2023 ஆம் ஆண்டு இருண்டதாக இருக்கும் என்று கணித்திருந்தார். வேற்றுகிரகவாசிகளின் வருகைகள் மற்றும் அணுகுண்டு வெடிப்புகள் சாத்தியமாகும் என அவரது கணிப்பு கூறுகிறது.

9/11, வட கொரியாவுடனான பதட்டங்கள், பிரெக்சிட், பராக் ஒபாமாவின் ஜனாதிபதி பதவி, இளவரசி டயானாவின் மரணம் போன்றவற்றை சரியாகக் கணித்ததாகக் கூறப்படும் பார்வையற்ற தெளிவாளரான பாபா வங்கா, 2023-ஆம் ஆண்டிலும் சில அதிர்ச்சியூட்டும் கணிப்புகளைச் செய்தார்.

ஏலியன் தாக்குதல் முதல் ஆய்வகக் குழந்தைகள் வரை: 2023க்கான பாபா வாங்காவின் பயங்கரமான கணிப்புகள்! | Baba Vanga Predictions 2023 Alien Lab Babies

பாபா வங்கா

கணிப்புகளுக்குச் செல்வதற்கு முன், “பால்கன்களின் நாஸ்ட்ராடாமஸ்” என்றும் அழைக்கப்படும் புகழ்பெற்ற பாபா வங்காவைப் பற்றி கொஞ்சம் தெரிந்து கொள்வோம்.

பாபா வங்கா 1911-ல் வடக்கு மாசிடோனியாவில் உள்ள ஸ்ட்ரூமிகாவில் பிறந்தார் மற்றும் பல்கேரியாவில் உள்ள கொசுஹ் மலைகளின் ரூபிட் பகுதியில் தனது வாழ்நாளின் பெரும்பகுதியை கழித்ததாக நம்பப்படுகிறது. அவர் 1996-ல் இறந்தார். ஆனால் 5079-ஆம் ஆண்டு வரை இயங்கும் கணிப்புகளைச் செய்துள்ளார், அதன்பிறகு உலகம் அழியும் என்று அவர் நமபினார்.

எதிர்காலத்தைப் பார்க்கும் அரிய வரத்தை கடவுளிடமிருந்து பெற்றதாக அவர் கூறியதாக செய்திகள் குறிப்பிடுகின்றன. கடவுளின் பரிசு என்றும், 12 வயதில் பார்வையை இழந்தார் என்றும் அவர் கூறினார்.

ஏலியன் தாக்குதல் முதல் ஆய்வகக் குழந்தைகள் வரை: 2023க்கான பாபா வாங்காவின் பயங்கரமான கணிப்புகள்! | Baba Vanga Predictions 2023 Alien Lab Babies

2023க்கான பாபா வாங்காவின் கணிப்புகள்:

சூரிய புயல்: பாபா வாங்காவின் கூற்றுப்படி, உலகம் இதுவரை கண்டிராத அளவில் 2023-ஆம் ஆண்டில் சூரிய புயல் பூமியைத் தாக்கும் என்று ஊடக அறிக்கைகள் கூறுகின்றன.


உயிரி ஆயுதங்கள் (Bio-weapons):
2023 ஆம் ஆண்டில், ஒரு “பெரிய நாடு” மக்கள் மீது உயிரி ஆயுத ஆராய்ச்சியை மேற்கொள்ளும் என்றும் அவர் கூறினார். இத்தகைய ஆராய்ச்சியின் முடிவு ஆயிரக்கணக்கான மக்களின் மரணத்தை ஏற்படுத்தும்.


அணு வெடிப்பு:
2022-ஆம் ஆண்டின் தொடக்கம் முதல், உக்ரைன் போரில் மேற்கத்திய நாடுகள் மற்றும் ரஷ்யா இடையே அதிகரித்த பதட்டங்களுக்கு மத்தியில் உலகம் அணு வெடிப்புக்கு மிக அருகில் வந்தது. பாபா வங்கா 2023-ல் அணுமின் நிலையம் வெடிக்கும் என்று கணித்துள்ளார்.

வேற்றுகிரகவாசிகளின் வருகை: பூமியில் வேற்றுகிரகவாசிகளின் வருகை பற்றிய வங்காவின் தீர்க்கதரிசனம் எல்லாவற்றிலும் பயங்கரமான கணிப்புகளில் ஒன்றாகும். உலகம் “இருளில் மூடப்பட்டிருக்கும்” என்று காணலாம். அடுத்த ஆண்டு வேற்றுகிரகவாசிகள் பூமிக்கு வருகை தந்தால் மில்லியன் கணக்கானவர்கள் இறக்க நேரிடும் என்று அவர் கூறியுள்ளார் .


ஆய்வகக் குழந்தைகள்:
வங்காவின் கணிப்புகளின்படி, மனிதர்கள் 2023-ல் ஆய்வகங்களில் வளருவார்கள். அறிவியலில் தொடர்ச்சியான முன்னேற்றங்களுடன், ஆய்வகக் குழந்தைகளின் கருத்து உண்மையாக மாறக்கூடும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் தோல் நிறம் மற்றும் பண்புகளை தீர்மானிக்க முடியும் என்று வங்கா கூறுகிறார்.
 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.