சத்தத்தைக் கொண்டே வாகன பழுதை சரி செய்யும் பார்வையற்ற இளைஞர்

தெலுங்கானா மாநிலம் வாரங்கலை சேர்ந்த பார்வையற்ற இளைஞர் ஒருவர் சத்தம் மூலம் வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதை சரி செய்து கொடுக்கிறார்.

காசிபுக்கா பகுதியைச் சேர்ந்த ஹபீஸ் என்பவர் தனது இரு கண்களையும் விபத்தில் பறிகொடுத்தார். இந்த நிலையில் குடும்பத்தை நடத்துவதில் சிரமப்பட்ட அவர் இரு சக்கர வாகனங்கள் பழுது பார்க்கும் பணியை மேற்கொண்டார்.

வாகனங்களில் ஏற்படும் சத்தத்தைக் கொண்டே எங்கு பழுது ஏற்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அதனை சரி செய்து கொடுக்கிறார்.

இவரது இந்த திறமையை அறிந்தவர்கள் தங்களின் வண்டியை அவரிடமே பழுது பார்க்க கொடுத்து வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.