அரசு துறைகளில் பணிபுரியும் ஊழியர்களில் சொந்த தொழில் தொடங்க விரும்புவோருக்கு ஒரு வருடம் சம்பளத்துடன் விடுமுறை அளிக்கும் திட்டத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு கொண்டுவந்துள்ளது.
அரசின் துறை சார்ந்த தலைவரே இந்த விடுமுறைக்கு ஒப்புதல் வழங்குவார். மேலும் அரசு ஊழியர்கள் புதிதாக தொழில் தொடங்குவதற்கும், நிறுவனங்களை நடத்துவதற்கும் யுஏஇ அரசு உதவும் என்று அதிகாரிகள் தெரிவிதுள்ளனர்.

இந்த திட்டத்தின் மூலம் பல புதிய நிறுவனங்களும், பல்வேறு வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்படும் என்பதால் அந்நாட்டு அமைச்சரவையில் ஒப்புதல் பெறப்பட்டுவிட்டதாக ஐக்கிய அரபு அமீரக அரசின் உயரதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த திட்டத்தின் கீழ் பாதி ஊதியமும், வேலை உறுதியுடன் கூடிய விடுமுறையும் அளிக்கப்படும். நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்த இளைஞர்கள் புதிய தொழில் நிறுவனங்களை தொடங்க வேண்டும் என்பதே இலக்கு என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டம் 2023 ஆம் ஆண்டு ஜனவரி முதல் அமலுக்கு வரும் என்றும், விருப்பம் உள்ளவர்கள் திட்டத்தை பயனப்டுத்திக்கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
newstm.in