பிரசவத்தின்போது தாய், குழந்தை பலி: மக்கள் சாலை மறியல்

கல்வராயன்மலை: கள்ளக்குறிச்சி  மாவட்டம் கல்வராயன்மலையில் உள்ள ஆலனூர் கிராமத்தை சேர்ந்தவர்  பாக்கியராஜ் (30). இவருக்கும், அதே ஊரைச்சேர்ந்த மல்லிகா (25) என்பவருக்கும்  கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. நிறைமாத கர்ப்பிணியாக இருந்த  மல்லிகாவுக்கு நேற்றுமுன்தினம் மதியம் பிரசவ வலி ஏற்பட்டது. இதையடுத்து  அவரை சோராப்பட்டு அரசு  மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு செவிலியர்கள் மட்டுமே  இருந்துள்ளனர். அவர்கள் மல்லிகாவுக்கு  பிரசவம் பார்த்துள்ளனர்.

தொடர்ந்து நேற்று முன்தினம் மாலை  சுமார் 6.30 மணியளவில் மல்லிகாவுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்து 5  நிமிடத்தில் குழந்தை இறந்தது. தொடர்ந்து அடுத்த 5 நிமிடத்திலேயே மல்லிகாவும்  இறந்து விட்டார். இதனையறிந்த மல்லிகாவின் கணவரும், உறவினர்களும்  கதறியழுதனர். செவிலியர்களின்  தவறான சிகிச்சையால் தாயும், குழந்தையும் இறந்ததாக கூறி மல்லிகாவின்  உறவினர்களும், மலைமக்களும் நேற்று அரசு மருத்துவமனை முன் மறியலில் ஈடுபட்டனர்.

தகவலறிந்து வந்த தாசில்தார் சையது காதர் மற்றும்  இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன், மலைமக்களிடம் பேச்சுவார்த்தை  நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின், போராட்டம் கைவிடப்பட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.