ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தனித்து போட்டியா அல்லது அதிமுகவுக்கு ஆதரவா என்று இதுவரை பாஜக அறிவிக்கவில்லை: ஜான் பாண்டியன்

ஈரோடு கிழக்கு இடைத் தேர்தலில் தனித்து போட்டியா அல்லது அதிமுகவுக்கு ஆதரவா என்று இதுவரை பாஜக அறிவிக்கவில்லை என தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் தெரிவித்துள்ளார். அதிமுகவின் இரு அணிகளும் ஆதரவு கேட்ட போதும் பாஜக தரப்பில் இருந்து எந்தவொரு அறிவிப்பும் வெளியாகவில்லை எனவும் அண்ணாமலையுடன் மாநில நலன் சார்ந்து பேசியதாக பன்னீர்செல்வம் கூறிச் சென்றதால் இடைத்தேர்தல் தொடர்பாக பாஜகவினர் பேசவில்லையா என சந்தேகம் எழுந்துள்ளதாகவும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் எங்கள் கட்சி உள்ளது எனவும் ஜான் பாண்டியன் கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.