குஜராத் தேர்தல் தோல்வி எதிரொலி; 38 காங்கிரஸ் நிர்வாகிகள் நீக்கம்.!

மொத்தம் 182 தொகுதிகளை கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு டிசம்பர் மாதம் 1, 5 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதில், பதிவான வாக்குகளின் எண்ணிக்கை கடந்த 8ஆம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. அதன்படி, பாஜக 156 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 17 தொகுதிகளிலும், ஆம் ஆத்மி 5 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.

குஜராத்தில் ஆட்சியமைக்க 92 தொகுதிகளில் பெரும்பான்மை பெற்றிருக்க வேண்டும் என்ற நிலையில், 156 தொகுதிகளில் வெற்றி பெற்று பாஜக பெரும்பான்மை பெற்றது. குஜராத் மாநிலத்தில் 1985ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சி 149 தொகுதிகளில் வெற்றி பெற்றது. அதுவே அதிக தொகுதிகளில் ஒரு கட்சி அம்மாநிலத்தில் வெற்று பெற்ற வரலாற்று சாதனையாக இருந்தது. அதனை 2022 சட்டமன்றத் தேர்தலில் பாஜக முறியடித்தது.

கடந்த 2017ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி 77 தொகுதிகளில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை மிகவும் மோசமாக தோல்வியடைந்துள்ளது. ஆனால், ஆம் ஆத்மி கட்சிக்கு வெறும் 5 இடங்களே கிடைத்தன. இருப்பினும், அக்கட்சியின் வாக்கு பகிர்வு சுமார் 13 சதவீதமாக உள்ளது. காங்கிரஸ் கட்சியின் வாக்குகளை ஆம் ஆத்மி பிரித்துள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

குஜராத்தின் 18ஆவது முதலமைச்சராக பூபேந்திர படேல் பதவியேற்றார். இதன் மூலம், குஜராத்தில் 7ஆவது முறையாக பாஜக ஆட்சி அமைத்துள்ளது. முதல்வர் பூபேந்திர படேல் தொடர்ந்து இரண்டாவது முறையாக முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். 60 வயதான பூபேந்திர படேல் 2021ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் விஜய் ரூபானிக்கு பதிலாக பொறுப்பேற்றார். அதனைத்தொடர்ந்து, இரண்டாவது முறையாக தற்போது குஜராத் முதல்வராக பொறுப்பேற்றுள்ளார்.

இந்தநிலையில் சட்டப்பேரவை தேர்தலின் போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதாக 38 பேரை காங்கிரஸ் கட்சி சஸ்பெண்ட் செய்துள்ளது. இது குறித்து குஜராத் காங்கிரஸின் ஒழுக்காற்றுக் குழு ஒருங்கிணைப்பாளர் பாலுபாய் படேல் கூறும்போது, ‘‘குஜராத் காங்கிரஸின் ஒழுக்காற்றுக் குழு இந்த மாதம் இரண்டு முறை கூடி, இதுவரை 95 பேர் மீது 71 புகார்கள் பெறப்பட்டுள்ளது.

விமானத்தில் சிறுநீர் கழித்த விவகாரம்; ஏர் இந்தியாவிற்கு 30 லட்சம் அபராதம்.!

அதன்படி டிசம்பரில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலின் போது கட்சி விரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக 38 நிர்வாகிகளை 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். அதன்படி சுரேந்திரநகர் மாவட்டத் தலைவர் ராயபாய் ரத்தோட், நர்மதா மாவட்டத் தலைவர் ஹரேந்திர வாலண்ட், நந்தோட் முன்னாள் எம்எல்ஏ பி.டி.வாசவா உள்ளிட்ட 38 பேர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படும். எட்டு நிர்வாகிகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது” என்று படேல் கூறினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.