நாட்டின் பாதுகாப்பு குறித்து டெல்லியில் நடைபெறும் டிஜிபிக்கள்- ஐஜிக்கள் வருடாந்திர மாநாடு… பிரதமர் மோடி பங்கேற்பு

இணையப் பாதுகாப்பு, எல்லைப் பகுதி அச்சுறுத்தல்கள், சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட பல்வேறு முக்கியப் பிரச்சினைகள் குறித்து ஆலோசிக்க வருடாந்திர கூட்டம் டெல்லியில் நடைபெறுகிறது.

இன்றும் நாளையும் இக்கூட்டத்தில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். அனைத்து மாநில காவல்துறை தலைவர்கள், தேசிய பாதுகாப்பு முகமை அதிகாரிகள், துணை ராணுவப் படை உயர் அதிகாரிகள் உள்பட பலர் இதில் பங்கேற்கின்றனர்.

நேற்று இக்கூட்டத்தைத் தொடங்கி வைத்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, எல்லைத் தாண்டி கடத்தி வரப்படும் போதைப் பொருள்களுக்கு எதிரான யுத்தம் நடத்தும் படி வலியுறுத்தினார்.டிரோன்கள் மூலம் ஆயுதங்களும் போதைப் பொருள்களும் எல்லை வழியாக கடத்தி வரப்படுவதைத் தடுத்திட அமித் ஷா வலியுறுத்தினார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.