திருவனந்தபுரம்: கேரள மாநில பாக்யகுரி துறை மூலம் ஒவ்வொரு சனிக்கிழமையும் நடத்தப்படும் காருண்யா கேஆர் 585 லாட்டரி குலுக்கல் இன்று நடைபெறுகிறது. மாலை 3 மணிக்கு குலுக்கல் நடைபெறும். திருவனந்தபுரத்தில் உள்ள கார்க்கி பவனில் குலுக்கல் நடைபெறவுள்ளது.
முடிவுகள் லாட்டரி துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான http://keralalotteries.com/ இல் வெளியிடப்படும். பரிசு பெறுபவருக்கு முதல் பரிசாக ரூ.80 லட்சமும், இரண்டாம் பரிசாக ரூ.10 லட்சமும் வழங்கப்படும். காருண்யா லாட்டரி சீட்டு விலை ரூ.40. 8000 ஆறுதல் பரிசும் வழங்கப்படும்.
இதற்கு முன் பாக்யாகுரி லாட்டரியில் முதல் பரிசு என்கே 332073 என்ற எண்ணுக்கு வழங்கப்பட்டது. இரிஞ்சாலக்குடியில் விற்கப்பட்ட டிக்கெட்டுக்கு 70 லட்சம் ரூபாய் முதல் பரிசு கிடைத்தது. நிமிஷா ஷகிர் என்ற ஏஜென்ட் டிக்கெட்டை விற்றுள்ளார். இரண்டாவது பரிசாக 10 லட்சம் ரூபாய் என்எஹ் 447131 என்ற எண் கொண்ட டிக்கெட்டுக்கு வழங்கப்பட்டது. இந்த டிக்கெட் பட்டாம்பியில் விற்கப்பட்டது. அஜித் நாத் என்ற ஏஜென்ட் டிக்கெட்டை விற்றார்.
லாட்டரி பரிசு ரூ.5000க்கு குறைவாக இருந்தால் கேரளாவில் உள்ள எந்த லாட்டரி கடையில் இருந்தும் தொகையை பெற்றுக்கொள்ளலாம். ரூ.5000க்கு மேல் இருந்தால் டிக்கெட் மற்றும் அடையாளச் சான்றினை அரசு லாட்டரி அலுவலகம் அல்லது வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். வெற்றியாளர்கள் அரசிதழில் வெளியிடப்பட்ட முடிவை சரிபார்த்து, பரிசு பெற்ற லாட்டரி சீட்டை 30 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். அதன் பிறகு லாட்டரிக்கான பரிசுத் தொகை வழங்கப்படும்.
இந்த ஆண்டு கோடைக்கால பம்பர் ரேஃபிள் விற்பனை தொடங்கியுள்ளது. சம்மர் பம்பரின் முதல் பரிசு ரூ.10 கோடி ஆகும். டிக்கெட் விலை 250 ரூபாய். 12 பேருக்கு இரண்டாம் பரிசாக ரூ.50 லட்சமும், மூன்றாம் பரிசாக தலா ரூ.5 லட்சமும் வழங்கப்படும். கடந்த ஆண்டை விட மொத்தப் பரிசுகள் இரட்டிப்பாகியுள்ளன. மொத்தம் 1,53,433 பரிசுகள் உள்ளன. குலுக்கல் மார்ச் 23, 2023 அன்று நடைபெறும்.
கேரள லாட்டரி குலுக்கலில் மக்கள் மிகுந்த ஆர்வத்துடன் பங்கு கொண்டு வரும் நிலையில், கோடைக்கால பம்பர் ரேஃபிளில் அறிவிகப்பட்டுள்ள பரிசுத் தொகைகள் மிக அதிகமாக உள்ளதால், இது குறித்த மக்களின் உற்சாகம் இன்னு அதிகமாகி உள்ளது.