அரக்கோணம் அருகே கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இருவர் பலியாகியுள்ளனர்.
கீழ்வீதி கிராமத்தில் கோயில் திருவிழாவின் போது, சாமிக்கு கிரேன் மூலமாக மாலை அணிவிக்க முயன்றபோது விபத்து ஏற்பட்டதில் 2 பேர் பலியாகினர்.
ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த கீழ்வீதி கிராமத்தில் அமைந்துள்ள திரௌபதி அம்மன் கோயில் இன்று திருவிழா நடைபெற்றது.
இந்த கோவில் திருவிழாவில் அம்மனுக்கு மாலை அணிவிக்க முயன்றபோது கிரேன் கவிழ்ந்ததில் பூபாலன், முத்து ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர்.
#அரக்கோணம் அடுத்த கீழ் விதி கிராமத்தில் திரௌபதி அம்மன் கோவில் திருவிழா #கிரேன் மூலமாக மாலை செலுத்து முயற்சி செய்தபோது எதிர்பாராத விதமாக க்ரீன் விழுந்து 8 பேர் படுகாயம்.. 2 பேர் உயிரிழப்பு #Arakonnam_crane_accident pic.twitter.com/agXhAgIydu
— RAMJI (@newsreporterra1) January 22, 2023
மேலும், இந்த விபத்தில் படுகாயமடைந்த 8 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.