கார் விபத்தில் சிக்கிய முதியவர் 8 கி.மீ., இழுத்து செல்லப்பட்டு பலி| Old man who was involved in a car accident was dragged for 8 km and died

பாட்னா: பீஹாரில் கார் மோதியதில், அதன் மீது விழுந்த முதியவர், 8 கி.மீ., துாரம் இழுத்துச் செல்லப்பட்டு பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திஉள்ளது.

பீஹார் மாநிலம், சம்பாரன் மாவட்டத்தில் உள்ள பங்கரா கிராமத்தைச் சேர்ந்தவர் சங்கர் சவ்துார், 70. இங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை இவர், நேற்று சைக்கிளில் கடக்க முயன்ற போது, அந்த வழியாக வேகமாக வந்த கார் மோதியது.

இதில், கார் மீது விழுந்து தொங்கிய நிலையில், 8 கி.மீ., துாரத்துக்கு முதியவர் இழுத்துச் செல்லப்பட்டார்.

பின், கீழே விழுந்த அவர் மீது காரை ஏற்றிவிட்டு, டிரைவர் தப்பிச் சென்றார்.

இந்த கொடூர விபத்தில், சம்பவ இடத்திலேயே முதியவர் பலியானார்.

விபத்து குறித்து விசாரணை நடத்திவரும் போலீசார், கண்காணிப்பு கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் காரை பறிமுதல் செய்தனர்; டிரைவரை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.