சம்மட்டிபுரம் வரி வசூல் செய்யும் மாநகராட்சி பில் கலெக்டரை கடத்தும் சிசிடிவி காட்சி..!

மதுரை, சம்மட்டிபுரத்தில் வரி வசூல் செய்யும் மையத்தின் பில் கலெக்டர், ஒன்றரை லட்சம் ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு மாநகராட்சி சான்றிதழ் வாங்கி கொடுக்க காலம் தாழ்த்தியதாக கூறி கடத்தப்பட்ட நிலையில், அவர் கடத்தப்படும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. 

பிபி சாவடி திருமலை காலனியைச் சேர்ந்த பில் கலெக்டர் சரண்ராஜின் மனைவி, கணவர் கடத்தப்பட்டதாக திடீர் நகர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் போரில் தனிப்படை அமைத்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில் வத்தலகுண்டு சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் மேலாளராக பணிபுரியும் கண்ணதாசன் மற்றும் ஓட்டுநர் அருண்பாண்டி ஆகியோர் சரண்ராஜை கடத்தியது தெரியவந்துள்ளது.

கடத்தப்பட்டு உசிலம்பட்டியில் வைக்கப்பட்டிருந்த சரண்ராஜை மீட்ட போலீசார், கைது செய்யப்பட்ட இரண்டு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.