தலைமை நீதிபதியை பாராட்டிய பிரதமர்; அரசியல் நோக்கர்கள் அதிர்ச்சி.!

உச்ச நீதிமன்றம் மற்றும் உயர் நீதிமன்றங்களில் கொலிஜியம் முறைப்படி நீதிபதிகள் நியமனம் நடைபெறுகிறது. கொலிஜியத்தில் இடம்பெற்றுள்ள நீதிபதிகள் அளிக்கும் பரிந்துரையின் பேரில், ஒன்றிய அரசு புதிய நீதிபதிகளை நியமிக்கிறது. அந்தவகையில் நாட்டில் உள்ள பல்வேறு நீதுமன்றங்களில் நீதிபதிகளை நியமிக்க பரிந்துரைத்து, கொலிஜியம் கேட்டுக் கொண்டது. ஆனால் ஒன்றிய அரசு அதற்கு எந்த முடிவையும் சொல்லவில்லை. இதனால் பல நீதிமன்றங்களில் நீதிபதிகள் நியமிக்கப்படாமல் உள்ளது.

இதையடுத்து நீதி அமைப்பிற்கும், ஒன்றிய அரசிற்கும் இடையேயான மோதல் போக்கு வெளிச்சத்திற்கு வந்தது. கடந்த கடந்த நவம்பரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, கொலிஜியம் முறையை கடுமையாக விமர்சித்தார். கொலிஜியம் அமைப்பில் உள்ள நீதிபதிகள், தங்களுக்கு தெரிந்த வழக்கறிஞர்களை நீதிபதிகளாக பரிந்துரைப்பதாகவும், இதேபோல், தங்களுக்குத் தெரிந்த நீதிபதிகளுக்கு பதவி உயர்வு அளிக்க பரிந்துரைப்பதாகவும் கூறி, இது அடிப்படையிலேயே குறைபாடு உள்ள நடைமுறை என விமர்சித்தார்.

அதைத் தொடர்ந்து துணை ஜனாதிபதி ஜகதீப் தன்கரும், நீதி அமைப்பு பாராளுமன்றத்தை கட்டுப்படுத்துவதாக அதிருப்தி தெரிவித்தார். மேலும் இன்று ஒன்றிய சட்ட அமைச்சர் கிரண் ரிஜிஜு, ‘‘இந்திய ஜனநாயகத்தின் உண்மையான அழகு அதன் வெற்றி. அரசியலமைப்புச் சட்டத்தின் விதிகளையும், மக்களின் ஆணையையும் புறக்கணிப்பவர்கள் மட்டுமே இந்திய அரசியலமைப்புச் சட்டத்திற்கு மேலானவர்கள் என்று நினைக்கிறார்கள்’’ என உச்சநீதிமன்றத்தை சூசகமாக தாக்கி பேசினார்.

இத்தகைய சூழலில், உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியின் கருத்துக்கு பிரதமர் பாராட்டு திடீரென தெரிவித்துள்ளது பேசு பொருளாகியுள்ளது. உச்சநீதிமன்ற தீர்ப்புகளை பிராந்திய மொழிகளில் வழங்குவது குறித்து இந்திய தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் சமீபத்தில் கூறிய கருத்துக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். மும்பையில் மகாராஷ்டிரா மற்றும் கோவா பார் கவுன்சில் ஏற்பாடு செய்திருந்த நிகழ்ச்சியில் தலைமை நீதிபதி நேற்று கருத்து தெரிவித்தார்.

இதை மேற்கோள்காட்டி பிரதமர் மோடி தனது டிவிட்டர் பதிவில், “சமீபத்திய விழாவில், தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட், பிராந்திய மொழிகளில் உச்சநீதிமன்ற தீர்ப்புகள் கிடைக்கப் பாடுபட வேண்டியதன் அவசியத்தைப் பற்றிப் பேசினார். அதற்கு தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும் அவர் பரிந்துரைத்தார். இது பாராட்டுக்குரிய சிந்தனை, இது பலருக்கு உதவும். குறிப்பாக இளைஞர்களுக்கு வெகுவாக பயன்படும்.

மோடி, அமித்ஷா யார் வந்தாலும் வெற்றி எங்களுக்கு தான்; சித்தராமையா உறுதி.!

இந்தியாவில் பல மொழிகள் உள்ளன, அவை நமது கலாச்சார அதிர்வை அதிகரிக்கின்றன. பொறியியல் மற்றும் மருத்துவம் போன்ற பாடங்களை ஒருவரின் தாய்மொழியில் படிக்கும் விருப்பத்தை வழங்குவது உட்பட, இந்திய மொழிகளை ஊக்குவிக்க மத்திய அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது” என்று பிரதமர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.