பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவிக்கும் இலங்கையில் இருந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் தமிழகம் வந்துள்ளனர்.
இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியால் அங்கு மக்கள் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்காமலும் குழந்தைகளுடன் பசி பட்டினியுடன் தவித்து வருகின்றனர்.
அதன் காரணமாக இலங்கையில் வாழ்ந்து வரும் தமிழர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி பலர் வாழ வழியின்றி, தங்களது வாழ்வாதாரத்தை பாதுகாத்து கொள்ள தமிழகத்திற்கு அகதிகளாக வந்த வண்ணம் உள்ளனர்.
இந்த நிலையில் இலங்கையிலிருந்து இதுவரை தமிழகத்திற்கு 160-க்கும் மேற்பட்டோர் அகதிகளாக வந்துள்ளனர். இந்த நிலையில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் ராமேசுவரம் கடல் பகுதிக்கு இலங்கையிலிருந்து கள்ளத்தோணி வந்துள்ளனர். அவர்களை மீட்ட அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.