ஈரோடு மாவட்டத்தில் குடும்பத் தகராறில் மனைவி பிரிந்து சென்றதால் கணவர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ஈரோடு மாவட்டம் பெரிய வேட்டுவபாளையம் பகுதியை சேர்ந்தவர் தூய்மை பணியாளர் சிவக்குமார் (26). இவரது மனைவி அகல்யா. இவர்களுக்கு ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவிக்கிடையே ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக, கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு அகல்யா கணவனைப் பிரிந்து குழந்தைகளோடு தாய் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதனால் சிவகுமார் மனமுடைந்து காணப்பட்டார். இதையடுத்து நேற்று முன்தினம் சிவக்குமார் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த பெருந்துறை போலீசார் சிவகுமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.