சீனர்கள் மீதான துப்பாக்கிச்சூடு; தன்னைத் தானே சுட்டுக் கொண்ட குற்றவாளி.!

சந்திர புத்தாண்டு என்பது சீனாவில் மிக முக்கியமான வருடாந்திர விடுமுறையாகக் கருதப்படுகிறது. ஒவ்வொரு ஆண்டும் சீன இராசியின் 12 அறிகுறிகளில் ஒன்றின் பெயரால் மீண்டும் மீண்டும் சுழற்சியில் கொண்டாடபடுகிறது. இந்த ஆண்டு முயல் ஆண்டு.

இந்த கொண்டாட்டத்தில் பெரிய குடும்பக் கூட்டங்கள் மற்றும் கோயில்களுக்குச் செல்லும் கூட்டம் ஆகியவை அடங்கும். புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது குழந்தைகளுக்கான பணத்துடன் கூடிய விரிவான இரவு உணவுகள் மற்றும் சிவப்பு உறைகள் ஆகியவை வழங்குவது நடைபெறும். அதன்படி சீனா மற்றும் வியட்நாமில் இருந்து அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்த குடும்பங்கள், நேற்று முன் தினம் நள்ளிரவு அமெரிக்காவின் தெற்கு கலிபோர்னியாவில் உள்ள ஆசிய நகரத்தில், சந்திர புத்தாண்டைக் கொண்டாடினர்.

லாஸ் ஏஞ்சல்ஸ் நகரத்திலிருந்து சுமார் 16 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பெரிய ஆசிய மக்கள்தொகை கொண்ட பகுதியாக ஆசிய நகரம் விளங்குகிறது. இங்கு சுமார் 60 ஆயிரம் ஆசிய மக்கள் வசித்து வருகின்றனர்.

சனிக்கிழமை இரவு 10 மணிக்குப் பிறகு (இந்திய நேரப்படி காலை 6 மணி) மான்டேரி பூங்காவில் சீன சந்திர புத்தாண்டு கொண்டாட்டம் நடைபெறும் இடத்தில் திடிரென துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. முன்னதாக திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டனர். அப்போது அங்கிருந்த மான்டேரி பூங்காவில் மர்மநபர் ஒருவர் பொதுமக்களைப் பார்த்து சுடத் தொடங்கினார். துப்பாக்கிச் சூட்டில் 10 பேர் இறந்துள்ளனர் மற்றும் குறைந்தது 10 பேர் காயமடைந்தனர்.

ஆசிய மக்கள் மீதான அமெரிக்கர்களின் வெறுப்பின் காரணமாக இந்த துப்பாக்கிச்சூடு நடைபெற்றதாக சர்ச்சைகள் எழுந்தது. அதைத் தொடர்ந்து மர்மநபரை தீவிரமாக தேடி வந்த போலீசார், அவரை கண்டுபிடித்தனர்.

ஹூ கேன் டிரான் எனும் 72 வயதான நபர், சீன சந்திர புத்தாண்டு விழாவில் துப்பாக்கிச் சூடு நடத்தினார் என்பது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து போலீசார் அவரை வேனில் வழிமறித்து சுற்றி வளைத்தனர். அதிகாரிகள் வாகனத்தை நெருங்கும் போது அவர் தன்னைத் தானே சுட்டுக்கொண்டார்.

மேலும் இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்தில் வேறு சந்தேக நபர்கள் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அதிகாரிகள், தாக்குதலுக்கான நோக்கம் இன்னும் அறியப்படவில்லை என்றும், விசாரணை இன்னும் தொடர்கிறது என்றும் கூறினர். உயிரிழந்த சீன மக்களுக்கு துக்கம் அனுசரிக்கும் வகையில், அமெரிக்காவில் உள்ள பொதுகட்டிடங்களில் உள்ள தேசிய கொடிகளை அரைக் கம்பத்தில் பறக்க விட அதிபர் ஜோ பிடன் உத்தரவிட்டுள்ளார்.

தைரியம் இருந்தா தேர்தலில் போட்டியிடு ! அண்ணாமலைக்கு சவால்

துப்பாக்கி வன்முறை என்பது அமெரிக்காவில் ஒரு பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. துப்பாக்கி வன்முறை காப்பக இணையதளத்தின்படி, கடந்த ஆண்டில் மட்டும் பொதுவெளியில் 647 துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளது.

‘வருந்தத்தக்க நிலையில் உலகம்’ – ஐநா பொதுச்செயலாளர் கவலை!

அந்தவகையில் அமெரிக்காவில் கடந்த ஆண்டு மட்டும் 44 ஆயிரம் பேர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் உயிரிழந்துள்ளனர். அமெரிக்காவில் பள்ளிக்கூட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த மே மாதம் டெக்சாஸில் 18 வயது இளைஞன் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் 19 குழந்தைகள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.