தாய் வீட்டுக்கு சென்ற மனைவி… கோபத்தில் ஆணுறுப்பை வெட்டிய இளைஞர்

Man Cuts Private Part: பிகாரின் மாதேபுரா மாவட்டத்தில் உள்ள ரஜினி நயநகர் பகுதியில், கடந்த வெள்ளிக்கிழமை (ஜன. 20) இரவு ஒரு அதிர்ச்சிக்கரமான சம்பவம் நடந்ததுள்ளது. ரஜினி நயநகர் பகுதியில் 25 வயதான கிருஷ்ணா பாசுகி என்ற இளைஞர் வசித்து வருகிறார். இவர் பிகாரின் கோல்போரா பகுதியில் வசித்து வரும் சோத் லால் பாசுகி என்பவரின் மகளான அனிதாவை திருமணம் செய்துள்ளனர். 

கிருஷ்ணா பாசுகி – அனிதா தம்பதியருக்கு மூன்று பெண் குழந்தைகளும், ஒரு ஆண் குழந்தையும் உள்ளது. தற்போது, கிருஷ்ணா பஞ்சாப் மாநிலத்தில் உள்ள மண்டி பகுதியில் வசித்து அங்கேயே பணியாற்றி வந்துள்ளார். இவர், பிகார் ரஜினி நயநகர் பகுதியில் வசித்து வரும் தனது குடும்பத்தினரை பார்க்க இரண்டு மாதங்களுக்கு பின் வந்துள்ளார் என தெரிவிக்கப்படுகிறது. 

அப்போது, மனைவி அனிதா அங்கு இல்லை என்பது அவருக்கு தெரிய வருகிறது. அனிதா அவரின் பெற்றோர் வீட்டிற்கு சென்றிருப்பதாகவும், நீண்டநாள் ஆகியும் ரஜினி நயநகர் பகுதியில் உள்ள வீட்டிற்கு வரவில்லை எனவும் கிருஷ்ணாவின் குடும்பத்தினர் கூறியுள்ளனர். 

இதையடுத்து, கிருஷ்ணாவுக்கும், அனிதாவுக்கும் வாக்குவாதம் நடைபெற்றதாகவும் கூறப்படுகிறது. தனது பெற்றோரை தனியாக தவிக்கவிட்டு, அனிதா அவரது பெற்றோர் வீட்டுக்குச் சென்று நீண்டநாளாக வரமால் இருந்ததால், கோபமடைந்த கிருஷ்ணா கூர்மையான பொருளைக் கொண்டு, தனது பிறப்புறுப்பை வெட்டிக்கொண்டதாக கூறப்படுகிறது. 

ரத்த வெள்ளத்தில் மிதந்த கிருஷ்ணாவை அவரது உறவினர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு தற்போது அவர் நலமுடன் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், கிருஷ்ணாவுக்கு நீண்ட நாள்களாக மனநலம் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.   

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.