பாகிஸ்தானில் முக்கிய நகரங்களில் நாள் முழுக்க மின்சாரம் துண்டிப்பு

பாகிஸ்தானின் முக்கிய நகரங்களில் நாள் முழுக்க மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.

மின் பகிர்மான நிலையத்திலுள்ள ஜெனரேட்டர்களை முறையாக பராமரிக்காததால், தொழில்நுட்பக்கோளாறு ஏற்பட்டு, காலை முதலே கராச்சி, இஸ்லாமாபாத், லாகூர் உள்ளிட்ட முக்கிய நகரங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மெட்ரோ ரயில்கள் இயக்கப்படாததால் அலுவலம் செல்வோர் சிரமத்திற்கு உள்ளாகினர்.

மருத்துவமனைகளில், எக்ஸ்ரே உள்ளிட்ட மருத்துவ கருவிகளை இயக்கமுடியாததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகினர். இரவு 10 மணிக்குள் மின் விநியோகம் சீரடைந்துவிடும் என அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.