மதுவில் விஷம் கலந்து குடித்து 2 பேர் தற்கொலை… காரணம் குறித்து போலீசார் விசாரணை

திருவள்ளூர் மாவட்டம் சோழவரம் அருகே 2 பேர் மதுவில் விஷம் கலந்து குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர். 

சோழிப்பாளையத்தை  சேர்ந்த கட்டிட தொழிலாளிகளான ஆனந்தன்  மற்றும் சிவக்குமார், அங்குள்ள மைதானத்தில் மயங்கிய நிலையில் கிடந்தனர்.  போலீசார் அங்கு சென்று பார்த்தபோது சிவக்குமார் சடலமாக கிடந்தார்.  ஆனந்தனை மீட்டு மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்ற நிலையில், அவரை பரிசோதித்த மருத்துவர்கள் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

விசாரணையில் ஆனந்தனின் இருசக்கர வாகனம் திருடு போனதால், அவரை மனைவி திட்டியதும், இதனால் ஆனந்தன் விஷம் குடித்ததும் கண்டறியப்பட்டது.

அதேநேரத்தில், மதுவில் விஷத்தை ஆனந்தன் கலந்தது தெரியாமல் சிவக்குமார் குடித்து இறந்தாரா அல்லது அவரும் விஷமருந்தி தற்கொலை செய்து கொண்டாரா என்ற கோணத்தில் சோழவரம் போலீசார் விசாரித்து வருகின்றனர்

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.