லடாக்கை பிரதமர் காப்பாற்ற வேண்டும்; நிஜ கொசஸ்கி பசப்புகழ் கோரிக்கை.!

இந்தியில் ராஜ்குமார் ஹிரானி இயக்கத்தில் அமீர்கான் மற்றும் மாதவன் நடிப்பில் வெளியான 3 இடியட்ஸ் திரைப்படம், தமிழில் விஜய் நடிப்பில் நண்பன் என்ற பெயரில் வெளியானது. நண்பன் படத்தில் பஞ்சவன் பாரி வேந்தனாக அறிமுகமாகும் நடிகர் விஜய், இறுதியில் விஞ்ஞானி கொசஸ்கி பசப்புகழாக குழந்தைகளுக்கு செயல்வழிக் கற்றல் முறையில் பொறியியல் படிப்பை கற்று கொடுப்பார். கல்வியின் உண்மையான நோக்கத்தை அறிந்து படிப்பதால் ஏற்படும் நேர்மறையான விளைவுகளை உணர்வுப்பூர்வமாக காட்சிப்படுத்திய இப்படங்கள் வசூல் ரீதியிலும், விமர்சன ரீதியிலும் மிகுந்த வரவேற்பை பெற்றன.

லடாக்கின் சமூக சீர்திருத்தவாதியான சோனம் வாங்சக் என்பவரின் வாழ்க்கையை மையப்படுத்தி தான் இந்த 3 இடியட்ஸ் படம் எடுக்கப்பட்டது குறிப்பிடதக்கது. நிலையான வளர்ச்சியை ஏற்றுக்கொள்வதன் அவசியத்தை வலியுறுத்தி, கல்வி சீர்திருத்தவாதியாக இருந்த சோனம் வாங்சுக் பொறியியலாளராக மாறினார். இந்தநிலையில் லடாக்கின் பாதுகாப்பை உறுதி செய்ய பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என சோனம் வாங்சக் கோரிக்கை விடுத்துள்ளார்.

இது குறித்து அவர் தனது யூடியூப் வீடியோவில் கூறும்போது, ‘‘ லடாக்கின் “சுற்றுச்சூழல் உணர்திறன்” பகுதியைப் பாதுகாக்க உதவுமாறு நாட்டு மக்களுக்கும் உலக மக்களுக்கும் அவசர வேண்டுகோள். கவனக்குறைவு தொடர்ந்தால் மற்றும் லடாக்கிற்கு தொழில்துறையிலிருந்து பாதுகாப்பு வழங்கப்படுவதைத் தவிர்த்தால், இங்குள்ள பனிப்பாறைகள் அழிந்துவிடும், இதனால் இந்தியாவிலும் அதன் சுற்றுப்புறத்திலும் தண்ணீர் பற்றாக்குறையால் பெரும் பிரச்சனைகள் உருவாகும்.

தீவிர நடவடிக்கைகள் எடுக்கப்படாவிட்டால், லடாக்கில் தொழில்கள், சுற்றுலா மற்றும் வர்த்தகம் தொடர்ந்து வளர்ச்சியடையும், ஆனால் இறுதியில் பனிப்பாறைகள் காணாமால் போகும். காஷ்மீர் பல்கலைக்கழகம் மற்றும் பிற ஆராய்ச்சி நிறுவனங்களின் சமீபத்திய ஆய்வுகள், லே மற்றும் லடாக்கில் உள்ள பனிப்பாறைகள் கிட்டத்தட்ட 2/3 என்ற அளவில் உருகிவருவதாக கூறுகின்றன. நெடுஞ்சாலைகள் மற்றும் மனித நடவடிக்கைகளின் காரணமாக பனிப்பாறைகள் ஒப்பீட்டளவில் வேகமாக உருகுவதை ஆய்வுகள் கண்டறிந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவிற்கு இணையாக உள்ளூர் மாசுபாடு மற்றும் கார்பன் உமிழ்வுகளும் புவி வெப்பமயமாவதற்கு தீவிர காரணிகளாக உள்ளன. லடாக் போன்ற பகுதிகளில், இங்குள்ள மற்றும் நாடு முழுவதும் உள்ள உள்ளூர் மக்களுக்கு பனிப்பாறைகள் அப்படியே இருக்கும் வகையில் குறைந்தபட்ச மனித நடவடிக்கைகள் இருக்க வேண்டும்.

லடாக் மற்றும் பிற இமயமலைப் பகுதிகளை “தொழில்துறை சுரண்டலில்” இருந்து பாதுகாப்பதை பிரதமர் உறுதி செய்ய வேண்டும். லடாக் மற்றும் பிற இமயமலைப் பகுதிகளுக்கு இந்தத் தொழில்துறைச் சுரண்டலில் இருந்து பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்பது பிரதமர் மோடிக்கு எனது வேண்டுகோள். பருவநிலை மாற்றம் குறித்து அக்கறை கொண்டு, அதைத் தணிப்பதற்கான நடவடிக்கைகளைக் கவனியுங்கள்.

மோடிக்கும் மம்தாவிற்கு இடையே மோ-மோ ஒப்பந்தம்; காங்கிரஸ் எம்பி கிண்டல்.!

வளங்கள், வளர்ச்சி இலக்குகளை அடையப் பயன்படுத்தப்படுகின்றன. அதே நேரத்தில் இயற்கையை பாதிக்காத வகையில் அவற்றைப் பாதுகாக்க வேண்டும். இயற்கை அதன் வளங்களையும் சேவைகளையும் மனிதர்களுக்கு வழங்குகிறது’’ என அவர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.