'வாழ்த்துகள் இளங்கோவன்'… மொத்த பகையும் தீர்க்க ஈரோடு வருகிறோம் – நாதக

காங்கிரஸ் எம்எல்ஏ திருமகன் ஈவெரா மறைவால் ஈரோடு கிழக்கு தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பிப்ரவரி 27 ஆம் தேதி இடைதேர்த்தல் நடக்கவுள்ளது. ஜனவரி 31 ஆம் தேதி முதல் வேட்புமனு தாக்கல் துவங்கி பிப்ரவரி 7 ஆம் தேதியோடு முடிகிறது. இந்நிலையில், திமுக கூட்டணியில் உள்ள காங்கிரசுக்கு இடைதேர்தலில் போட்டியிட வாய்ப்பு அளிக்கப்பட்டு வேட்பாளராக திருமகன் ஈவெராவின் தந்தையும், காங்கிரஸ் கமிட்டியின் தலைவருமான ஈவிகேஎஸ்
இளங்கோவன்
அறிவிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் அதிமுக – காங்கிரஸ் என்ற போட்டி நிலவுகிறது. மூன்றாவதாக
நாம் தமிழர்
கட்சி காங்கிரசின் வாக்குகளை பிரிக்க பலப்பரீட்சை நடத்த திட்டமிட்டுள்ளது. நாம் தமிழர் கட்சியின் பிரதான அரசியல் எதிரி வரிசையில் காங்கிரஸ் உள்ளது. அதனை தொடர்ந்து திமுக. இந்நிலையில், காங்கிரஸ் வேட்பாளரை தோற்கடித்துவிட்டால் அது திமுகவுக்கும் கொடுக்கப்படும் அடியாக இருக்கும் என்று நாம் தமிழர் கருதும்.

கடந்த 2021 தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் மகன் திருமகன் ஈவெரா 67 ஆயிரத்து 300 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அவரை எதிர்த்து அ.தி.மு.க. கூட்டணி சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிட்ட த.மா.கா. வேட்பாளர் யுவராஜ் 58 ஆயிரத்து 396 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கோமதி 11 ஆயிரத்து 629 வாக்குகள் பெற்று 3-ம் இடத்தையும், மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் ராஜ்குமார் 10 ஆயிரத்து 5 வாக்குகள் பெற்று 4-வது இடத்தையும் பெற்றனர்.

இதுவரை தனித்து தேர்தல்களை சந்தித்து வரும் நாம் தமிழர் கட்சி பல தொகுதிகளில் காங்கிரசின் தோல்விக்கு காரணமாக இருந்துள்ளது. கடந்த முறைகூட ஈரோடு கிழக்கு தொகுதியில் திமுக, அதிமுகவுக்கு அடுத்து கணிசமான வாக்குக்களை நாம் தமிழர் பெற்று 3வது இடத்தை பிடித்து கமலஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை பின்தள்ளி இருக்கிறது.

ஈரோடு கிழக்கில் திமுக போட்டியிட்டிருந்தால்கூட பயங்கர செலவு செய்து செல்வாக்கை காட்டி மற்ற கட்சிகளுக்கு நெருக்கடி கொடுத்திருக்க முடியும். ஆனால், போட்டியிடுவது காங்கிரஸ் என்பதால் நாம் தமிழர் கட்சிக்கு தேர்தல் களம் சுலபமாகியுள்ளது. இந்த நிலையில், நேற்றைய தினம் காங்கிரஸ் வேட்பாளர் அறிவிக்கப்பட்டார். அதற்கு கருத்து தெரிவித்து நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்பு செயலாளர் சாட்டை துரைமுருகன் ட்வீட் போட்டார். அதில், வாழ்த்துகள் இளங்கோவன் அவர்களே! மொத்த பகையும் தீர்த்துக் கொள்ள ஈரோடு வருகிறோம்” என்று சவால் விட்டுள்ளார்.

ஈரோட்டில் எத்தனை கட்சிகள் போட்டியிட்டாலும், காங்கிரஸ் வேட்பாளரை வீழ்த்த நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரையில் பட்டையை கிளப்ப தயாராகி வருகிறாராம். மேலும், இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டால் அதிமுகவுக்கு மேஜிக் நடக்க வாய்ப்பு உள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.