20 மாத குழந்தையை சீரழித்த காமுகன் கைது| Kamugan arrested for molesting 20-month-old child

மும்பை, மஹாராஷ்டிராவில், 20 மாத குழந்தையை பாலியல் பலாத்காரம் செய்து சீரழித்த காமுகனை, போலீசார் நேற்று ‘போக்சோ’ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

மஹாராஷ்டிரா தலைநகர் மும்பையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வரும் தம்பதியர், தங்களின் 20 மாத பெண் குழந்தையை, பக்கத்து வீட்டில் வசிக்கும் 35 வயது நபர் பாலியல் பலாத்காரம் செய்ததாக நேற்று முன்தினம் போலீசில் புகார் அளித்தனர்.

இதில், தங்கள் குழந்தை தொடர்ந்து அழுது கொண்டே இருந்ததாகவும், டாக்டரிடம் காட்டியதில், குழந்தை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதாக அவர் கூறியதாகவும் தெரிவித்திருந்தனர்.

இந்நிலையில், அந்த நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையின் பெற்றோர் இல்லாத நேரத்தில் அதை பலாத்காரம் செய்தது தெரிய வந்தது.

இதையடுத்து, போக்சோ உள்ளிட்ட பல சட்டப் பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்த போலீசார், அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

உங்களுக்காக சிபாரிசு செய்யப்படுகிறது

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.