#BREAKING: அந்தமான் தீவுகளுக்கு புதிய பெயர்..!!

சுபாஷ் சந்திர போசின் பிறந்த தினமான இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வரும் நிலையில், காணொலி காட்சி மூலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்தமான் நிகோபார் தீவுகளில் பெயர் இல்லாத 21 தீவுகளுக்கு பெயர் சூட்டி வீரர்களை கவுரவித்துள்ளார்.

அந்தமான் நிகோபார் யூனியன் பிரதேசத்தின் பகுதியாக உள்ள தீவுகளில் இதுவரை பெயரிடப்படாமல் உள்ள 21 பெரிய தீவுகள் உள்ளன. ராணுவ வீரர்களின் சேவையைப் போற்றும் வகையில் அந்தத் தீவுகளுக்கு ராணுவ வீரர்கள் பெயரைச் சூட்ட மத்திய அரசு முடிவு செய்த்து. இதன்படி, இன்று நடைபெற்ற அரசு விழாவில் 21 தீவுகளுக்கும் பிரதமர் நரேந்திர மோடி 21 ராணுவ வீர்கள் பெயரைச் சூட்டினார்.

அளவில் மிகப்பெரிய தீவுக்கு முதல் பரம்வீர் சக்ரா விருதை பெற்றவரின் பெயர் வைக்கப்பட்டுள்ளது. விக்ரம் பத்ரா, ராமசாமி பரமேஸ்வரன், மனோஜ்குமார் பாண்டே ஆகியோரின் பெயர்கள் தீவுகளுக்கு வைக்கப்பட்டுள்ளது. அடுத்தடுத்த அளவுள்ள தீவுகளுக்கு அடுத்தடுத்து பரம்வீர் சக்ரா விருது பெற்றவர்களின் பெயர்கள் வைக்கப்பட்டுள்ளது. சோம்நாத் தீவு, மனோஜ் பாண்டே தீவு, சேத்ரபால் தீவு, சஞ்சய் தீவு உள்ளிட்ட பெயர்கள் சூட்டப்பட்டன.

விழாவில் பேசிய பிரதமர் மோடி, “முதன்முதலாக மூவர்ணக்கொடி ஏற்றப்பட்ட பூமி இந்த அந்தமான் நிலம். சுதந்திர இந்திய அரசாங்கம் முதல்முறையாக உருவாக்கப்பட்டது இங்குதான். இன்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின் பிறந்தநாள். இந்த நாளை பராக்கிரம் திவாஸ் என்று நாடு கொண்டாடுகிறது.” என்றார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.