Breaking: திடீரென தற்கொலை செய்து கொண்ட பிரபல இயக்குனர்: சோகத்தில் திரையுலகம்.!

தெலுங்கு திரையுலகில் கடந்த 2013 ஆம் ஆண்டு வெளியாகி வரவேற்பை பெற்ற ‘சுவாமி ரா ரா’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் சுதீர் வர்மா. இதனை தொடர்ந்து நிகில் சித்தார்த், பிரபல நடிகரான நாகசைதன்யா உள்ளிட்ட பிரபலங்களை வைத்து படம் இயக்கி வந்தார். இந்நிலையில் சுதீர் வர்மா திடீரென தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் திரையுலகினர் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல இயக்குனரான சுதீர் வர்மா சில படங்களிலும் நடித்துள்ளார். தற்போது இவர் தெலுங்கில் முன்னணி நடிகரான ரவிதேஜாவை வைத்து ‘ராவணாசுரா’ என்ற படத்தை இயக்கி வந்தார். இந்நிலையில் இயக்குநர் மற்றும் நடிகரான சுதீர் வர்மா காலமாகியுள்ளார்.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

சில தனிப்பட்ட பிரச்சனைகள் காரணமாக சுதீர் வர்மா விசாகப்பட்டினத்தில் உள்ள அவரது இல்லத்தில் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. சுதீர் வர்மாவுக்கு ஒரு மனைவியும் இரண்டு குழந்தைகளும் உள்ளனர். இவரது மறைவு தெலுங்கு திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Dhanush: ‘தனுஷ் 50’ படத்தில் இந்த நடிகையா.?: இதென்ன புது ட்விஸ்ட்.!

இவரது மறைவு தொடர்பாக நடிகர் சுதாகர் கோமகுல, “சுதீர் மிகவும் அழகான மற்றும் அன்பான மனிதர். உங்களை அறிந்ததும் உங்களுடன் பணியாற்றியதும் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது சகோதரா. நீங்கள் இப்போது இல்லை என்பதை ஜீரணிக்க முடியவில்லை” எனக் குறிப்பிட்டுள்ளார். இது போன்று பலரும் சுதீரின் திடீர் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.