சேலம் அருகே பரிதாபம்.! செங்கல் சூளை தீயில் விழுந்த சிறுவன் உயிரிழப்பு.!

சேலம் மாவட்டத்தில் செங்கல் சூளை தீயில் தவறி விழுந்த சிறுவன் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளான்.

சேலம் மாவட்டம் புதூர்காடம்பட்டி பகுதியை சேர்ந்தவர் பெருமாள்(50). இவர் கொரியர் நிறுவனதில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜானகி. இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இவர்கள் அப்பகுதியில் உள்ள செங்கல் சூலையில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் சம்பவத்தன்று இரவு செங்கல் சூளையில் வேலை நடந்து கொண்டிருந்தபோது, பெருமாளின் கடைசி மகன் உன்னிகிருஷ்ணன் (16) எதிர்பாராத விதமாக தவறி அங்கு தீயில் விழுந்துள்ளார். இதையடுத்து அப்பகுதியில் இருந்தவர்கள் உடனடியாக உன்னி கிருஷ்ணனை மீட்டு சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உன்னிகிருஷ்ணன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.