சைக்கிளில் சென்ற சிறுவன் மீது கார் மோதி பரிதாபமாக பலி.. பதப்பதைக்கும் சிசிடிவி காட்சி..!

கோவை போத்தனூர் அருகே, கார் மோதிய விபத்தில், சைக்கிளில் சென்ற சிறுவன் உயிரிழந்தது தொடர்பான காட்சிகள் சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வண்ணாரப்பேட்டையை சேர்ந்த இறைச்சிக்கடைக்காரர் பாஷீத் என்பவரின் மகன் ரைஃபுதீன், 3-ஆம் வகுப்பு படித்து வந்தார்.

கடந்த 22-ஆம் தேதி, இதே பகுதியை சேர்ந்த  சையது முகமது என்பவர், தெருவில் கார் ஓட்டி பழகிக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.

அப்போது கட்டுப்பாட்டை இழந்த கார், அங்கு சைக்கிள் ஓட்டி விளையாடிக்கொண்டிருந்த ரைஃபுதீன் மீது மோதியுள்ளது. இதில் காயமடைந்த சிறுவனை அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில், பரிசோதித்த மருத்துவர்கள் சிறுவன் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர்.

வெரைட்டியால் சாலை போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சையது முகமது மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.