‘ஐதராபாத்: தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமை செயலக திறப்பு விழாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் ஐதராபாத் நகரில் உசைன் சாகர் ஏரிக்கு அருகே உள்ள கட்டிடத்தில் தெலுங்கானா மாநில சட்டப்பேரவை மற்றும் தலைமை செயலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடம் சரித்திர புகழ் வாய்ந்தது ஆகும். இந்த கட்டிடத்தில் வாஸ்து சரியில்லை என கூறப்பட்டது. இதையடுத்து, புதிய கட்டிடம் கட்ட முடிவு செய்யப்பட்டது. அதன்படி, தலைமை செயலகத்துக்கு ரூ.400 கோடி செலவில் ஒரு […]