#பெரம்பலூர் : கருப்பா இருக்க உன் கூட வாழனும்னா.. காசுக்காக மனைவியை கணவன் செய்த செயல்.! 

பெரம்பலூர் மாவட்டம் கோனேரி பாளையம் பகுதியைச் சேர்ந்த அகிலா என்பவர் தனது கணவர் மற்றும் குடும்பத்தினர் மீது மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். 

கடந்த 2021 இல் கோனேரி பாளையம் பகுதியில் வசித்து வரும் அகிலாவுக்கு விமல் என்பவர் உடன் திருமணம் நடந்துள்ளது. திருமணம் ஆன பின்பு தான் விமல் சரியில்லாத நபர் என்பது அகிலாவுக்கு தெரியவந்துள்ளது.

அன்றாடம் குடித்து விட்டு வந்து மன மற்றும் உடல் ரீதியான துன்புறுத்தலில் அவர் ஈடுபட்டு வந்துள்ளார். மேலும், அகிலா கருப்பான நிறத்தை கொண்டிருப்பதால் அவருடன் சேர்ந்து வாழ லட்சக்கணக்கில் பணமும் 50 சவரன் நகையும் கேட்டு டார்ச்சர் செய்துள்ளார் 

விமலின் மொபைலை எடுத்துப் பார்த்தபோது அவர் பல பெண்களுடன் உல்லாசமாக இருக்கும் வீடியோக்கள் இருப்பதை கண்டு அகிலா அதிர்ச்சி அடைந்துள்ளார்  இது போன்ற தொந்தரவுகளுக்கு விமலின் குடும்பத்தினரும் உடந்தையாக இருப்பதாக அந்த புகாரில் அகிலா தெரிவித்துள்ளார்.இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.